நாட்டில் கறுப்பு பணத்தின் புழக்கமே வருமான வரிச்சட்டம் கடுமையானதாக அமுலாக காரணமாகும். கறுப்புப் பணமே வெளிநாட்டு முதலீடாக தற்போது அதிகளவில் நாட்டுக்குள் வருகிறது. இதன்படி அதிகளவிலான கறுப்புப் பணம் முதலீடாக வந்து வெள்ளை பணமாக மாற்றும் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளமை வருத்தப்பட வேண்டியது என தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
நேற்று தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான செயலாளர் கபிலகமகே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மக்களை அதிருப்திப்படுத்துவதாக அண்மையில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட வருமான வரிச் சட்டம் அமைந்துள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன் 7. 5 வீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி வீதம் தற்போது 2. 5 வீதத்தினால் குறைந்துள்ளது. எனவே மூன்று வருடங்களுக்கு முன்பு இருந்த பொருளாதார நிலைமையுடன் ஒப்பிட்டு பார்க்குமிடத்து நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கியே சென்றுள்ளது.
இந்த வரிக்கொள்கையூடாக உள்நாட்டு முதலீட்டாளர்களின் உழைக்கும் ஆர்வத்தை குறைப்பதுடன் வெளிநாட்டு பல்தேசிய கம்பனிகளுக்கான வாய்ப்பினை அதிகரிக்கின்றனர். இதனால் பல்தேசிய நிறுவனங்களின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கும். இந்த வரிக்கொள்கையூடாக உள்நாட்டு முதலீட்டாளர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். புதிய வரி சட்ட அமுலாக்கலூடாக கிடைக்கும் புதிய நன்மைகள் தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். காரணம் உலகளாவிய ரீதியில் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கும் விசேட திட்டத்தை இலங்கை கையிலெடுத்துள்ளதாகும்.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் சேவைகள் மற்றும் அபிவிருத்திகள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு சாதகமானதாக அமைய வேண்டும். அதுவே அரசாங்கத்தின் கடப்பாடு என்பதை நல்லாட்சி மறந்துவிடக் கூடாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM