தேசிய ரீதியில் மிகச்சிறந்த பங்களிப்புகளை வழங்கும் குவைத் எயார் வேஸ் புதிதான பல அபிவிருத்தி திட்டங்களை Boeing 777 விமானத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தவகையில் குறித்த விமானத்தில் பயணிகளின் நலன்கருதி முதலாம் வகுப்பு அறைகளை உருவாக்கியுள்ளது. இதனடிப்படையில் அடுக்குமுறை சார் திட்டங்களின்படியும், பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதியும், வசதிவாய்ப்புகளுடன் கூடிய வகையில் மேற்குறித்த வசதிவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நியூயோர்க்கிலிருந்து லண்டனுக்கு செல்லும் விமான சேவையினூடாக குறித்த விசேட சேவை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலும் இச்சேவை விருத்தி செய்யப்படவுள்ளது.
குவைத் எயார்வேஸ் தனது முதல் வகுப்பு பிரயாணிகளுக்கு சலுகையடிப்படையிலானதும், அரவணைப்புடன் கூடியதுமான பல திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட செயற்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையிலும், பிரதேச போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையிலும் முதல் வகுப்பு பிரயாணிகளுக்கு ஆசன வசதிகளை வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் குவைத் எயார்வேஸ் விடுத்திருந்த பல கட்டுப்பாடுகளுக்கு புறம்பாக ஒக்டோபர் மாதம் பத்து Boeing 777 விமானங்களை கொள் வனவு செய்யவுள்ளமை குறிப்பி டத்தக்கது.
அதுமட்டுமல்லாது குவைத் எயார்வேஸ் தற்போது புதிய ஐந்து எயார்பஸ் A330 ரக விமான ங்களை கடற்படைக்கு வழங்கவு ள்ளமையும் விசேட அம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM