அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணம் புரூக்ளின் நகரை சேர்ந்த 34 வயதான ஷாகித் வாஷெல் என்ற கறுப்பு இனத்தவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை மாலை ஷாகித் வாஷெல் புரூக்ளின் நகரில் உள்ள ஒரு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது அவர் தன் கையில் இரும்பு குழாய் ஒன்றை வைத்திருந்துள்ளார்.
இந் நிலையில் அந்த வழியாக நடந்து சென்றவர்கள் அவர் கையில் வைத்திருந்த இரும்பு குழாயை துப்பாக்கி என நினைத்து அச்சம் அடைந்து காவல்துறையின் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் 4 பேர் ஷாகித் வாஷெலை சுற்றிவளைத்ததனால் பதறிப்போன ஷாகித் வாஷெல் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து தனது கையில் இருந்த இரும்பு குழாயை காவல்துறையிடம் காட்டுவதற்காக அவர்களை நோக்கி நீட்டியுள்ளார்.
ஆனால் அவர் தங்களை சுடும் நோக்கில் துப்பாக்கியைத் தான் நீட்டுகிறார் என்று எண்ணிய காவல்துறை அதிகாரிகள் ஷாகித் வாஷெலை சரமாரியாக சுட்டுள்ளனர்.
4 பொலிஸ் அதிகாரிகள் ஒன்று சேர்ந்து 10 முறை அவரை சுட்டதில் ஷாகித் இரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
அதன் பின்னர் அவர் அருகில் சென்று பார்த்தபோது, அவர் கையில் இருந்தது துப்பாக்கி அல்ல இரும்பு குழாய் என்பது பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.
உடனே பொலிஸார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஷாகித் வாஷெலை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஷாகித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM