பிரசவத்தின் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி யொருவரின் மனைவி மர்ம நபரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் காஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பகதூர்காரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு அவரின் உடல் நிலைமை கவலைக்கிடமானது. இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு 3.30 மணிக்கு ஒருவர் காரில் குறித்த மருத்துவமனைக்கு வந்துள்ளார். குறித்த காரில் இருந்து இறங்கிய அவர் நேராக தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்று அங்கு இருந்த பொலிஸ்அதிகாரி யின் மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு சென்றுள்ளார்.
அந்த நபரின் உருவம் மருத்துவமனையில் இருந்த சி.சி.ரி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள். மருத்துவமனையின் அலட்சியத்தால்தான் பாலியல் துஷ்பிரயோகம் நடந்துள்ளது என்று அப்பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த மர்ம நபர் வந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு செல்லும் வரை மருத்துவமனை ஊழியர்கள் ஒருவர் கூட தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM