சல்மான்கான் உள்பட பாலிவுட் நட்சத்திரங்களான சயீப் அலிகான், நடிகை தபு சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர்கள் மான்கள் வேட்டையாடியதாக கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.
இந்த தீர்ப்பில் சல்மான்கான் குற்றவாளி என்றும் சயீப் அலிகான், நடிகை தபு சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர்கள் விடுவிக்கப்பட்டும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே ‘ஹம் சாத் சாத் ஹைன்’ என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படப்பிடிப்பின் இடைவெளியில் சல்மான்கான் படக்குழுவினர்களுடன் வேட்டைக்கு சென்றுள்ளார்.
அவர்களுடன் சயீப் அலிகான், நடிகை தபு சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர்களும் சென்றுள்ளனர்.
வேட்டைக்குச் சென்ற இடத்தில் அபூர்வமாக காணப்படும் இரண்டு கருப்புநிற மான்களை சல்மான்கான் சுட்டு வேட்டையாடியதாக வனத்துறையினர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சல்மான்கான் மீதும் அவருடன் சென்ற மற்றவர்கள் மீதும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள சல்மான்கானின் தண்டனை விபரம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM