தாய் சிறுத்தையை தேடியலைந்த ஒருமாதமேயான குட்டி சிறுத்தை பிடிட்டது!!!

Published By: Digital Desk 7

04 Apr, 2018 | 06:56 PM
image

இறந்த நிலையில் மீட்கப்பட்ட தாய் சிறுத்தையை தேடி அலைந்த குட்டி சிறுத்தையை பிடித்த தோட்ட முகாமையாளர் நல்லத்தண்ணி வனஜீவி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார் 

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா ஹன்சி  தோட்ட தேயிலை மலையில் அநாதரவாக திரிந்த சிறுத்தை குட்டியே இன்று பிடிக்கப்பட்டுள்ளது 

கடந்த 2ஆம் திகதி ஹன்சி தோட்டத்தில் ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதியிலிருந்து இறந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்கப்பட்டது.  கம்பி வளையில் சிக்குண்டு பலியான பெண் சிறுத்தையின் உடல் சிதைவுன்ட நிலையில் உடவல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையிலே அதே இடத்தில் ஒரு மாதமேயான சிறுத்தை குட்டி தோட்ட முகாமயையாளரால் கண்டு நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்