பண்டிகைக் காலம் இம்மாதம் முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் பாவனையாளர்களின் நலன்கருதி நாடளாவிய ரீதியில் உணவு தொடர்பில் பரிசோதனை நடத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார சங்கச் செயளாலர் எம்.பாலசூரிய தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பண்டிக்காலக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. எனவே நாடாளாவிய ரீதியில் காணப்படுகின்ற உணவு விடுதிகளிலும் உணவு பதப்படுத்தல் நிறுவனங்களிலும் மற்றும் பொது சந்தைகளிலும் மக்கள் பாவனைக்குதவாத காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்.
அதன் முதற்கட்டமாக நாடு பூராகவும் 2500 பொது சுகாதார பரிசோதகள் உணவு பரிசோதனைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ் வேலைத்திட்டத்தை நாம் இம் மாதம் முதலாம் திகதிலேயே ஆரம்பித்துள்ளோம். உணவு பரிசோதனையின் போது பதணிடப்பட்ட உணவு பொருட்கள், குளிர்பானங்கள், தேங்காய் எண்ணைய் , சீனி மற்றும் மா வகைகள் போன்வற்றில் விஷேட அவதானம் செலுத்தப்படவுள்ளது. பாவனையாளர்களால் அதிகம் நுகரப்படும் அதேவேளை கலப்படம் அதிகம் இடம்பெறுவதோடு, கலாவதியான பின்னரும் விற்பனைக்கு வைக்கப்படும் பொருட்களாக இவை இனங்காணப்பட்டுள்ளன.
எனவே மக்கள் இது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஹோட்டல்களிலும் இதேபோன்ற சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனினும் நுகர்வோர் தங்கள் பாதுகாப்பு கருதி எந்த பொருளை வாங்கும் போதும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM