பிரதமரின் அதிரடி அறிவிப்பு.!

Published By: Robert

04 Apr, 2018 | 09:55 AM
image

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை  மீதான வாக்­கெ­டுப்பு முடி­வுற்­ற­வுடன்  ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியில்  உட­ன­டி­யாக   மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கப்­படும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டத்தில் தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

அத்­துடன்  கட்­சியின் பொறுப்­பு­களை  புதிய அணி­யொன்­றிடம் சமர்ப்­பித்து  கட்­சியை   முழு­மை­யாக மறு­சீ­ர­மைத்து அடுத்­து­வரும் மாகா­ண­சபை மற்றும் ஏனைய  தேர்­தல்­களில் பல­மு­டைய  கட்­சி­யாக போட்­டி­யி­டப்­போ­வ­தா­கவும்  பிர­தமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்க சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். 

பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் நேற்று நடை­பெற்ற ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியின் விசேட பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டத்தில் இத­னைக்­கு­றிப்­பிட்­டி­ருக்­கின்றார். 

அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்;

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான விவாதம் நிறை­வ­டைந்­த­துமே   ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­படும்.   கட்­சியின் பொறுப்­புக்­களை புதிய அணி­யொன்­றிடம் சமர்ப்­பித்து  தேவை­யான மாற்­றங்­களை செய்­வ­தற்கு  நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். 

 எதிர்­வரும்  மாகா­ண­சபை தேர்தல் மற்றும் ஏனைய தேர்­தல்­களில்   பல­மாக கட்­சி­யாக போட்­டி­யிட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.  ருவன் விஜ­ய­வர்த்­தன குழுவின் பரிந்­து­ரைகள் மற்றும் ஏனைய  யோச­னைகள் தொடர்­பாக   விரி­வாக ஆராய்ந்து    அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும்.   

கட்­சியின்  புதிய பத­வி­க­ளுக்­கான நிய­மனம் தொடர்பில் எதிர்­வரும் 30ஆம் திக­திக்கு முன்னர் செயற்­கு­ழுவில்  தீர்­மானம் எடுக்­கப்­படும். இதற்­காக கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்­க­ளிடம்  ஆலோ­சனை பெறப்­படும். அந்­த­வ­கையில் எதிர்­வரும் 7 மற்றும் 8ஆம் திக­தி­களில்   ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் செயற்­கு­ழுக்­கூட்­டமும் விசேட பாரா­ளு­மன்­றக்­கு­ழுக்­கூட்­டமும் நடை­பெ­ற­வுள்­ளது. 

இந்த கூட்­டங்­களில் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு தொடர்­பான இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­படும்  அத்துடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆராய குழுவும் நியமிக்கப்படும்.  இதற்காக கட்சியின் தவிசாளர் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.  அதன்பின்னர்  அது குறித்து பாராளுமன்றக்குழுவிற்கு அறிவிக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41