கூட்டு எதிர்க்கட்சியினால் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதித் தீர்மானம் குறித்து ஆராயும் முக்கிய சந்திப்பு நேற்று இடம்பெற்றது. நேற்று காலை 10 மணிக்கு பாராளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலை வர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற நிலையில் காலையில் இடம்பெற்ற கூட்டத்தில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படாது காலை 11.30 மணியளவில் நிறைவுக்கு வந்தது.
இதனை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் அவசரமாக ஜனாதிபதியை சந்தித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப் பட்டுள்ளதுடன் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் தேசிய அரசாங்கத்தை கையாள்வதன் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆரோக்கியமாக கொண்டுசெல்லப்படுவது குறித்து இருதரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
இதனை அடுத்து நேற்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் கூடியது. பிற்பகல் 2 மணி தொடக்கம் 5 மணி வரையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போதும் எந்தவித தீர்மானமும் எடுக்காது முடிவுக்கு வந்துள்ளது.
நேற்றைய தினம் சுமார் ஐந்து மணிநேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதிலும் நேற்றைய தினமும் பிரேரணை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்றைய தினம் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் காலை 10 மணியளவில் மீண்டும் கூட்டமைப்பின் பாரளுமன்ற குழுக் கூட்டம் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் குறிப்பிடுகையில்,
நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் எந்த தீர்மானத்தையும் முன்னெடுக்கவில்லை. இந்நிலையில் பிரேரணை விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். அதன் பின்னர் மீண்டும் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூடியும் கலந்துரையாடினோம். எனினும் இறுதித் தீர்மானம் ஒன்றை முன்னெடுக்கவில்லை. நாளைய தினமும் (இன்று ) தீர்மானம் எடுக்க எமக்கு கால அவகாசம் உள்ளது. ஆகவே மீண்டும் கூடி நாம் ஆராய்வோம் எனக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM