இனி அமெரிக்க விசாவுக்கு இது கட்டாயமாம்.!

Published By: Robert

02 Apr, 2018 | 11:40 AM
image

அமெ­ரிக்­கா­விற்குள் பிர­வே­சிக்க விசா பெறு­வ­தற்கு விண்­ணப்­பிப்­ப­வர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­க­ளது  பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்­ள­டங்­க­லான சமூக வலைத்­த­ள தகவல்களை  பெற்றுக்கொள்ளும் செயற்­பாட்டை ஆரம்­பிக்க விரும்­பு­வ­தாக  அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பின் அர­சாங்கம் தெரி­விக்­கி­றது.

அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள இந்தப் பிரே­ர­ணை யின் பிர­காரம் பெரும்­பா­லான விசா விண்­ணப்­ப­தா­ரிகளிடம் தமது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இணை­யத்­தள பக்­கங்கள் தொடர்­பான விப­ரங்­களை  வழங்கக் கோரப்­படும்.

இதன் கீழ் விண்­ணப்­ப­தா­ரிகள் கடந்த 5 வருட காலத்­தி­லான  அனைத்து சமூக ஊட­கங்கள் தொடர்­பான தமது ஆள­டை­யா­ளப்­ப­டுத்­தல்­களை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்கும்.

 மேற்­படி பிரே­ர­ணை­களால் வரு­ட­மொன்­றுக்கு சுமார் 14.7  மில்­லியன் பேர் பாதிப்பை எதிர்­கொள்­ள­வுள்­ளனர்.

இந்த சமூக வலைத்­த­ளங்கள் பற்­றிய  தக­வல்கள்  குடி­யேற்­ற­வா­சிகள் மற்றும் குடி­யேற்­ற­வா­சிகள் அல்­லாதோர் ஆகிய இரு தரப்­பினர் தொடர்­பிலும் ஆள­டை­யாளம் காணவும்  பரி­சீ­ல­னையை மேற்­கொள்­ளவும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

இதன்­போது விண்­ணப்­ப­தா­ரி­க­ளிடம் அவர்­களால் ஐந்து வருட காலப் பகு­தியில் பயன்­ப­டுத்­தப்­பட்ட கைய­டக்கத் தொலை­பேசி இலக்­கங்கள், இலத்­தி­ர­னியல் அஞ்­சல்கள் மற்றும் பயண வர­லாறு என்­ப­ன­வற்றை வெளிப்­ப­டுத்தக் கோரப்­படும்.

அத்­துடன் அவர்கள் எந்­த­வொரு நாட்­டி­லு­மி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டார்­களா அல்­லது அவர்­களின் உற­வி­னர்கள் எவ­ரா­வது தீவி­ர­வாத செயற்­பாட்­டுடன் தொடர்­பு­பட்­டுள்­ளார்­களா என்­பன குறித்தும் வின­வப்­படும்.

அதே­ச­மயம்  விசா­வின்றி அமெ­ரிக்­கா­வுக்கு பயணம் செய்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள பிரித்­தா­னியா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜேர்­மனி ஆகிய நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் இந்தப் புதிய பிரே­ர­ணையால் பாதிக்­கப்­பட மாட்­டார்கள் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அமெ­ரிக்க விசாவைப் பெறு­வது தொடர் பில் மேற்­படி விதி­வி­லக்கைப் பெறாத நாடு­க­ளான இந்­தியா, சீனா மற்றும் மெக்­ஸிக்கோ ஆகிய நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் அமெ­ரிக்­கா­வுக்கு  பணி­யாற்­றவோ அன்றி விடு­மு­றையைக் கழிக்­கவோ விசா பெற முயற்­சிக்­கையில் புதிய பிரே­ர­ணையால் குழப்ப நிலை ஏற்­படும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்தப் புதிய பிரே­ரணை தீவி­ர­வா­தி­களை அடை­யாளம் காண  பெரிதும் உதவும் என அமெ­ரிக்க அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.

2015 ஆம் ஆண்டு அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்­தி­லுள்ள சான்­பி­ரான்­சிஸ்­கோவில்  இடம்­பெற்ற 14 பேரைப் பலி கொண்ட   துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது    தாக் குதல்தாரிகளுக்கிடையே சமூகவலைத் தளங் களினூடாக  அடிப்படைவாத செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டிருந்தன.

அந்த செய்திகளை உரிய நேரத்தில் கண் டறிந்திருந்தால் அந்தத் தாக்குதலை தவிர்த் திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58