அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க விசா பெறுவதற்கு விண்ணப்பிப்பவர்களில் பெரும்பாலானவர்களது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளடங்கலான சமூக வலைத்தள தகவல்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டை ஆரம்பிக்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் தெரிவிக்கிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணை யின் பிரகாரம் பெரும்பாலான விசா விண்ணப்பதாரிகளிடம் தமது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இணையத்தள பக்கங்கள் தொடர்பான விபரங்களை வழங்கக் கோரப்படும்.
இதன் கீழ் விண்ணப்பதாரிகள் கடந்த 5 வருட காலத்திலான அனைத்து சமூக ஊடகங்கள் தொடர்பான தமது ஆளடையாளப்படுத்தல்களை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.
மேற்படி பிரேரணைகளால் வருடமொன்றுக்கு சுமார் 14.7 மில்லியன் பேர் பாதிப்பை எதிர்கொள்ளவுள்ளனர்.
இந்த சமூக வலைத்தளங்கள் பற்றிய தகவல்கள் குடியேற்றவாசிகள் மற்றும் குடியேற்றவாசிகள் அல்லாதோர் ஆகிய இரு தரப்பினர் தொடர்பிலும் ஆளடையாளம் காணவும் பரிசீலனையை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படவுள்ளன.
இதன்போது விண்ணப்பதாரிகளிடம் அவர்களால் ஐந்து வருட காலப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள், இலத்திரனியல் அஞ்சல்கள் மற்றும் பயண வரலாறு என்பனவற்றை வெளிப்படுத்தக் கோரப்படும்.
அத்துடன் அவர்கள் எந்தவொரு நாட்டிலுமிருந்து வெளியேற்றப்பட்டார்களா அல்லது அவர்களின் உறவினர்கள் எவராவது தீவிரவாத செயற்பாட்டுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்பன குறித்தும் வினவப்படும்.
அதேசமயம் விசாவின்றி அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் புதிய பிரேரணையால் பாதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க விசாவைப் பெறுவது தொடர் பில் மேற்படி விதிவிலக்கைப் பெறாத நாடுகளான இந்தியா, சீனா மற்றும் மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு பணியாற்றவோ அன்றி விடுமுறையைக் கழிக்கவோ விசா பெற முயற்சிக்கையில் புதிய பிரேரணையால் குழப்ப நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புதிய பிரேரணை தீவிரவாதிகளை அடையாளம் காண பெரிதும் உதவும் என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
2015 ஆம் ஆண்டு அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள சான்பிரான்சிஸ்கோவில் இடம்பெற்ற 14 பேரைப் பலி கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது தாக் குதல்தாரிகளுக்கிடையே சமூகவலைத் தளங் களினூடாக அடிப்படைவாத செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டிருந்தன.
அந்த செய்திகளை உரிய நேரத்தில் கண் டறிந்திருந்தால் அந்தத் தாக்குதலை தவிர்த் திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM