பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பது குறித்து ஆராய இன்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக்குழு பிரதமர் தலைமையில் கூடுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியே சந்தித்து தனது நிலைப்பாட்டை பிரதமர் வெளிப்படுத்துவார் எனவும் கூறப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த வாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டங்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்புகள் என இடம்பெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் அக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் சகல உறுப்பினர்களையும் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறுகையில்,
பிரதமருக்கெதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை கட்டாயமாக தோற்கடிக்க வேண்டும். தேசிய அரசாங்கத்தை குழப்பி அதன் மூலம் மீண்டும் குடும்ப ஆட்சியைக் கொண்டுவர முயற்சிக்கும் மஹிந்த அணியினர் பாரிய சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் உள்ளன எனக் கூறியும் ஆதரவு இழக்கப்படுவதாக பொய்யான கருத்துக்களை கூறியும் அரசாங்கத்தினுள் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். எனினும் ஐக்கிய தேசியக் கட்சி பலமாக உள்ளது. எமது உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் இருந்தே செயற்பட்டு வருகின்றனர். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருசிலர் பிரதமருக்ெகதிராக கருத்துக்களை கூறிய போதிலும் கட்சியின் இறுதி நிலைப்பாடு அதுவல்ல. ஜனாதிபதியோ பொதுச்செயலாளரோ கட்சியின் நிலைப்பாட்டை இன்னும் முன்வைக்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இன்னும் தமது நிலைப்பாடுகளை கூறவில்லை. இன்றும் அவர்கள் அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் இருந்தே செயற்பட்டு வருகின்றனர். எனவே அரசாங்கத்தை ஆதரிக்கும் தரப்புக்கள் அதிகமாகும்.
ஆகவே பிரதமருக்கெதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாம் தோற்கடிப்போம். இந்நிலையில் நாளை (இன்று ) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் பிரதமர் தலைமையில் கூடுகின்றது. காலையில் நாம் சந்திப்புகளை நடத்து வோம். ஐக்கிய தேசிய முன்னணியின் சகல தலைமைகளும் பாராளுமன்ற உறுப் பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார் கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM