ஈ.பி.டி.பி. கட்சி ஒட்டுக்குழு என்றும், யுத்தக் குற்றம் புரிந்தவர்கள் என்றும், தமிழ் உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள் என் றும் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வீண்பழி சுமத்திவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க எங்களை நாடியுள்ளது.
இந்த நிலைமையானது கூட்டமைப்பு, அந்த பொய் குற்றச்சாட்டுக்களில் இருந்து எங்களை விடுவித்துள்ளதுடன் ஈ.பி.டி.பி. கட்சியும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தான் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதே வெளிப்படையான உண்மையாகும் என்று யாழ்.மாநகர சபை உறுப்பினர் றெமிடியஸ் மற்றும் குபேந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றங்களின் சில சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி கட்சி ஆதரவு வழங்கியதை வைத்து அவர்களுடன் எமது கட்சி கூட்டாட்சி அமைத்துவிட்டது என்று எண்ணிவிட வேண்டாம். ஈ.பி.டி.பி. கட்சியானது எப்போதும் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாது. தொடர்ந்தும் அதன் கொள்கையின் வழியிலேயே பயணிக்கும்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஈ.பி.டி.பி. மீது வசை பாடுவதே வேலையாக செய்துவந்தது. இதனை எமது கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பல தடைவ கூறியுள்ளார்.
ஈ.பி.டி.பி. மீது யுத்தக்குற்றம், ஒட்டுக்குழு, தமிழ் உறவுகள் காணாமல் போகச் செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் என்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு எமது கட்சியின் ஆதரவினை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.
ஈ.பி.டி.பி.யும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தான் என்பதை ஏற்றுக் கொண்டு, இதுவரை காலமும் ஈ.பி.டி.பி. கட்சி மீது சுமத்திவந்த பெய்யான குற்றச்சாட்டுக்களில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்களை விடுவித்துள்ளது. நாமும் தூய்மையான கரங்களை உடையவர்கள் தான் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளது என்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM