துபாய் நாட்டு இளவரசி கடல் வழியாக படகில் இந்தியாவிற்கு தப்பியோட்டம் : காரணம் இதுவா?

Published By: Digital Desk 7

30 Mar, 2018 | 07:12 PM
image

துபாய் நாட்டு இளவரசி இந்தியாவிற்கு கடல் வழியாக படகில்  தப்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூமின் மகளும், துபாய் நாட்டின் இளவரசியுமான சேகா லத்தீபா மலை ஏறுவது, குதிரையேற்றம், செயற்கை இறக்கையை கட்டிக்கொண்டு வானில் பறப்பது போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வமுடையவர்.

ஆனாலும் பிரதமர் சேக் முகமது தனது மகளை கட்டுப்படுத்தி வீட்டுக்காவலில் வைத்துள்ளார்.

சுதந்திரமாய் வாழ விரும்பிய சேகாவிற்கு இது பிடிக்கவில்லை. எனவே துபாய் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அவர் முடிவு செய்து,  இந்தியாவை தேர்வு செய்து இளவரசி சேகா கடந்த 4ஆம் திகதி தனது நண்பர் ஒருவருடன் ஒரு படகில் ஏறி கடல் வழியாக இந்திய கடல் பகுதியில் நுழைந்துள்ளார்.

இதை மோப்பம் பிடித்த இந்திய கடலோரக் காவல்படை சேகாவை கோவா அருகே மடக்கிப் பிடித்து, சேகாவையும் அவரது நண்பரையும் ஐக்கிய அரபு தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடல் வழியாக வந்த சேகாவை மர்ம நபர்கள் 4 பேர் கடத்தி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07