வெலிமடை பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு நேற்று நண்பகல் 12 மணியளவில் வெலிமடை பிரதேச சபையின் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது.
வெலிமடை பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் ஊவா மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் மங்கள விஜயநாயக தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச சபையின் தலைவராக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு தெரிவான எஸ்.ஏ.ஆர்.பந்துசேனவும், உப தலைவராக ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவான சீத்தா சமரவீரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பு திறந்த முறை வாக்கெடுப்பாகவே நடைபெற்றது.
இச்சபைக்கு தலைவரை தெரிவுசெய்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு தெரிவான இந்திக சம்பத் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.ஏ.ஆர்.பந்துசேன அவர்களும் போட்டியிட்டனர்.
இதில் 20 வாக்குகளைப் பெற்று எஸ்.ஏ.ஆர்.பந்துசேன தலைவர் பதவிக்கு தெரிவானார். இதற்கு எதிராக போட்டியிட்ட இந்திக சம்பத் 18 வாக்குகள் பெற்றுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சீத்தா சமரவீர உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
உப தலைவர் தெரிவுக்காக எதிர்கட்சி உறுப்பினர்களிடம் வினவியபோது, வேறு ஒருவரை தெரிவு செய்ய முன்வராததனால் இவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
41 உறுப்பினர்களைக் கொண்ட வெலிமடை பிரதேச சபை தலைவர் தெரிவு போட்டியின்போது, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் மூவர் வாக்களிக்கவில்லை என்பததோடு, இந்த தலைவர் தெரிவின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 15 பேர் வாக்களித்து ஆதரவு தெரிவித்தமை குறிப்பித்தக்கது.
வெலிமடை பிரதேச சபைக்கு தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு 15 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 5 ஆசனங்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 18 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கு 03 ஆசனமும் கிடைக்கப்பெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM