உதயங்கவை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை ஆரம்பம் : அரசாங்கம் 

Published By: Priyatharshan

29 Mar, 2018 | 05:17 AM
image

டுபாய் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசாங்கம் , இதேபோன்று விரைவில் அர்ஜுன் மகேந்திரனும் கொண்டு வரப்படுவார் என குறிப்பிட்டுள்ளது. 

 

அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன் கிழமை அரசாங்க தகவல் தினைக்களத்தில் இடம்பெற்றது.

 இதன்போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. 

இதன் போது உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகையில் ,

உதயங்க வீரதுங்கவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சர்வதேச பொலிசாரின் அல்லது குறித்த வெளிநாட்டின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதனடிப்படையில் செயற்பட்டமையினால் தற்போது டுபாய் பாதுகாப்பு தரப்பினால் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரது கைது நேற்று முன்தினமே இடம்பெற்றது. அவரை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதே போன்று அர்ஜுன் மகேந்திரனும் கொண்டு வரப்படுவார். இரண்டு விடயங்களும் வெவ்வேறு என்றாலும் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24