கிழக்கு மாகாணத்தில் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு எவரும் இல்லாத நிலையே காணப்படுகிறது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன்தினம் நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
மக்கள் ஆதரவளிக்காவிட்டாலும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கால் கையைப் பிடித்து பதவிகள் பெற்று வந்து மீண்டும் மீண்டும் தங்களை வளர்ப்பதிலேயும் திறமாய் இயங்கும் அரசியல்வாதிகளைப் பற்றி அவதூறு பேசுவதிலேயுமே இன்று சில அரசியல்வாதிகள் உள்ளனர். இது அவர்களின் அரசியல் வங்குரோத்து நிலையையே எடுத்துக்காட்டுகிறது இன்று கிழக்கு மாகாணத்தை இலங்கை வரலாற்றில் ஒரு எடுத்துக்காட்டான மாகாணமாக மாற்றவேண்டும் என்று சேவைகள் செய்து கொண்டு வருகிறோம். இங்கு வாழும் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் அவர்களுக்கான சேவைகள் விகிதாசார முறையில் வழங்கப்பட்டு சரியான வேலைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதற்காக எமது அமைச்சர்கள் உறுதியுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் தங்களால் எதுவும் செய்ய முடியாமல் மக்கள் சேவைக்காக ஒதுக்கப்படும் நிதிகளில் கொள்ளையடித்து தன்னையும் தன் குடும்பத்தையும் வளர்த்துக்கொண்ட சில அரசியல்வாதிகள் கிழக்கு முதலமைச்சரின் நிலைமையைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி எங்கே எதனைப் பேசுவதென்று தெரியாமல் உளறித்திரிவதனை பல ஊடகங்களில் காணக்கிடைக்கிறது.
சில்லறைத்தனமாக அரசியல் செய்வோருக்கு ஒருபோதும் அஞ்சும் முதலமைச்சராக கிழக்கு முதலமைச்சர் இருக்க மாட்டார்.
கடந்த பல ஆண்டுகளாக அரசியல் செய்யும் இவர்களால் கிழக்கு மக்கள் கண்ட பலன்கள் என்ன? இன்று பட்டதாரிகள் தொடங்கி, ஊழியர்கள் வரை ஏராளமான இளைஞர், யுவதிகள் எந்த தொழில் வாய்ப்பும் இல்லாமல் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று செய்கின்றனர்.
எனவே இதற்கெல்லாம் பொறுப்புக்கூற வேண்டிய இவர்கள் எனது சேவையினைப் பார்த்து பொறாமை பிடித்து உளறித்திரிவதற்கு மக்கள்தான் பதில் கூற வேண்டும் என்றார்
என் ஆட்சிக்காலத்தில் கிழக்கில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி விட்டே ஓய்வு பெறுவேன். மக்களின் தேவைகளைச் சிறந்த முறையில் பூர்த்தி செய்யும் ஒரு முதலமைச்சராக கிழக்கு முதலமைச்சர் செயற்படுவார். செயற்படுகிறார் என்பதனை இப்படியான கேவலம் கெட்ட அரசியல் செய்வோர் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM