கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிறன்று நடைபெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் சுப்பர் – 8 கால்பந்தாட்டப் போட்டிகளில் இராணுவம் இலகுவான வெற்றியைப் பெற, கடற்படை கடைசிக் கட்டத்தில் வெற்றியை சுவைத்தது.
திடீர் வீழ்ச்சி அடைந்துள்ள ஜாவா லேன் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இடைவேளைக்குப் பின்னர் ஆதிக்கம் செலுத்திய இராணுவ அணி 4–1 என்ற கோல்கள் அடிப்படையில் இலகுவாக வெற்றிபெற்றது.
இப் போட்டியின் முதலாவது பகுதியில் ஜாவா லேனிடம் சவாலை எதிர்கொண்ட இராணுவ அணி ஒரு கோலை மாத்திரம் போட்டிருந்தது. ஆனால் இடைவேளையின் பின்னர் திறமையாக விளையாடிய இராணுவ அணி மேலும் 3 கோல்களைப் போட்டது.
இராணுவம் சார்பாக திருண சேனாநாயக்க (20 நி., 90 நி.), ஜேசுராஜ் பேர்னார்ட் (65 நி., 70 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டனர். ஜாவா லேன் சார்பாக மாலக்க பெரேரா (87 நி.) கோல் ஒன்றைப் போட்டார்.
அன்றைய தினம் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் விமானப்படையிடம் கடும் சவாலை எதிர்கொண்ட கடற்படை 3 – 2 கோல்கள் அடிப்படையில் இறுக்கமான வெற்றியை ஈட்டியது.
இவ் வருடம் நடைபெற்ற போட்டிகளில் அதீத ஆற்றல்கள் வெளிப்படுத்தப்பட்ட இப் போட்டியில் இரண்டு அணியினரும் சமமாக மோதிக்கொண்டனர். எனினும் போட்டி முடிவடைய 3 நிமிடங்கள் இருந்தபோது கடற்படை வெற்றி கோலைப் போட்டது.
கடற்படை சார்பாக ஆபிரிக் கரான டேவிட் ஒசாஜி (12 நி.), மொஹம்மது இன்சாவ் (18 நி.), நிர்மல் விஜேதுங்க (87 நி.) ஆகியோரும் விமானப்படை சார் பாக குமார லன்கேசர (27 நி.), திமுது லக்மால் குணசிங்க (37 நி.) கோல்களைப் போட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM