கோத்தாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதிப்பதா இல்லையா? : தீர்மானம் அடுத்த மாதம் 5 ஆம் திகதி

Published By: Priyatharshan

28 Mar, 2018 | 09:14 AM
image

பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுப்பதை தடுத்து  பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குவதா இல்லையா என்பது குறித்த உத்தரவை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

 

இது குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று  மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்ற போதே இது அறிவிக்கப்பட்டது.  எவ்வாறாயினும்  கோத்தாயவுக்கு எதிராக பொதுச்சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தர்வு எதிர்வரும் ஏபரல் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

கோத்தாபயவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு, ஒரு பக்க வாதங்களை மட்டும் கேட்டுவிட்டு பிறப்பிக்கப்பட்டது எனவும் அது தொடர்பில் தமது எதிர்ப்பை வெளியிடுவதாகவும் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் விராஜ்தயரத்ன  மேன்முறையீட்டு நீதிமன்றில் சுட்டிக்காட்டினார். 

இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியே  மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன, ஷிரான் குணரத்ன ஆகிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழு, அது தொடர்பில் எதிர்வரும் 5 ஆம் திகதி உத்தரவொன்றினை தருவதாக அறிவித்தனர்.

ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணிப்பின் போது அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை  தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ சந்தேக நபராக கருதப்படும் நிலையில்,  அது தொடர்பில் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. அதனை நிறுத்தக் கோரியே கோத்தாபாய, மேன் முறையீட்டு மன்றில் ரீட் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58