பொலிஸாரால் வலை வீசி தேடப்பட்டு வரும் பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் தற்போது இத்தாலியில் வசித்துவருவதாக பொலிஸ் அதிரடிப்படை தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த பாதாள உலகக் குழுத் தலைவர் துபாயில் தங்கியிருந்த நிலையில் கைதுசெய்வதற்கான முயற்சிகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தபோதும் துபாய் நாட்டு சட்ட திட்டங்கள் காரணமாக சந்தேக நபரை கைது செய்ய முடியாமற் போனது.
பொலிஸாரின் கெடு பிடிகள் காரணமாக துபாயிலிருந்து தற்போது இத்தாலிக்கு தப்பியோடியுள்ள மாகந்துரே மதுஷ் இத்தாலியில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு செல்ல முயற்சித்துவருவதாக பொலிஸ் அதிரடிப்படை தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இத்தாலியில் மாகந்துரே மதுஷ் தங்கியிருக்கும் இடத்தையும் அடையாளம் கண்டுள்ள பொலிஸ் அதிரடிப்படை எதிர்வரும் சில தினங்களில் மதுஷை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சமயங் மற்றும் கொஸ் மல்லீ என அழைக்கப்படும் இரண்டு பாதாள உலகத்தவர்களின் கொலைகளில் மாகந்துரே மதுஷ் தொடர்புபட்டுள்ளதோடு விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்ததாகவும், இலங்கையில் முக்கிய பிரமுகர் ஒருவரின் கொலைக்கு உதவிகளை வழங்கியுள்ளமையும் விசாரணைகளில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிரடிப்படை தகவல் வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM