இலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குவதற்கு எதிராக சில மத நிறுவனங்கள் அண்மையில் கூச்சல் மேற்கொண்டதைத் தொடர்ந்து நான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். நான் இவ்விடயம் தொடர்பாக உலகளாவிய கருத்துகள், நூல்களைப் பற்றி அறிந்துள்ளேன். அத்துடன் சர்வதேச நிபுணர்களுடனும் இது குறித்து கலந்தாலோசித்துள்ளேன். இங்கு நான் கருக்கலைப்பு குறித்த எனது அறிவைத், தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். சில சர்வதேச நிபுணர்கள் அயர்லாந்து குடும்ப திட்டமிடல் சங்கத்துடனும் பிரஜைகள் பணியகத்துடனும் இணைந்து கருக்கலைப்பை அயர்லாந்தில் தளர்த்துவது தொடர்பாக பணியாற்றி வருகின்றனர்.
அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமாகும். அயர்லாந்து பிரஜைகள், பணியகம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரிடையே நான் கருக்கலைப்பு தொடர்பான அயர்லாந்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என முயன்று வருகிறேன்.
அயர்லாந்து பாராளுமன்றத்தில் விவாதத்தின் பின்னர் (சட்டப்பிரிவு– 08) கருக்கலைப்பை சட்ட ரீதியாக மேற்கொள்வதற்கு 2018 இல் கருத்துக்கணிப்பு மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. சட்டவிரோத கருக்கலைப்பை மேற்கொள்ளாதிருக்க, அதாவது கருக்கலைப்பை சட்ட ரீதியாக்க இலங்கையில் இதுவே தக்க தருணம். இலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்பு தாய் மரணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பதிலளிக்கக்கூடிய முக்கிய கேள்விகளாக பின்வருவன அமைகின்றன;
* சட்டபூர்வ கருக்கலைப்பு சேவையை வழங்க சுகாதாரசேவை அடிப்படைக் காரணம் என்ன?
* எதிர்காலத்தில் இலங்கையில் கருக்கலைப்பு சட்டம் தொடர்பில் தொடர்புபட்ட மனித உரிமைகள் நிலைவரம் என்ன?
* இலங்கையில் சிறந்த இனப்பெருக்க சுகாதார சேவையை உறுதி செய்ய என்ன கொள்கைகள் முன்வைக்கப்பட வேண்டும்?
இக்கேள்விகளுக்கு சர்வதேச மகளிர் நோயியல் மற்றும் மகப்பேற்று மருத்துவ மன்றத்தின் எப்.ஐ.ஜி.ஓ தீர்மானத்தின் வழிநின்று பதில் பெறமுடியும்.
* மருத்துவ காரணங்களுக்காக (வாழ்க்கைக்கும் சுகாதாரத்திற்கும் ஆபத்தான கட்டத்தில் கருக்கலைப்பானது சிறந்த இனப்பெருக்க சுகாதார சேவையாக பொதுவாக அனைத்து நாடுகளாலும் கருதப்படுகின்றது.
மருத்துவ காரணங்களுக்கு அப்பாற்பட்ட கருக்கலைப்பு தொடர்பாக எப்.ஐ.ஜி.ஓ. என்ன கருதுகிறது என்றால் பெண்களின் உரிமைகள் தொடர்பாக பாதுகாப்பற்ற கருக்கலைப்பை தவிர்த்து பாதுகாப்பான கருக்கலைப்பை நியாயப்படுத்தல்.
பல பொதுமக்கள், வைத்தியர்கள் உட்பட கருதுவது என்னவென்றால் இயன்றவரை கருக்கலைப்பை தவிர்ப்பது என்பதாகும்.
இக்குழுவின் தீர்மானமாகப் பெண்களுக்கு உரிய வழிகாட்டுதலின் கீழ் சிறந்த முறையில் கருக்கலைப்பு மேற்கொள்ள அவர்களுக்கு உரிமை உள்ளது என்பதாகும்.
எம்.ஐ.ஜி.ஒ. மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் போன்ற சர்வதேச அமைப்புகள் ஏன் பாதுகாப்பான கருக்கலைப்பை சிபார்சு செய்கின்றன?
பாதுகாப்பற்ற கருக்கலைப்பானது வலியையும் மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது.
கருக்கலைப்பு குற்றமானது. மரண வீதத்தையே அதிகரிக்கும். குற்றமற்ற கருக்கலைப்பு மரண வீதத்தை நிச்சயம் குறைக்கும். குற்றமற்ற கருக்கலைப்பு, கருக்கலைப்பு வீதத்தை அதிகரிக்காது.
உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பிற்கு 50,47,540 பெண்கள் உட்படுகிறார்கள். கருக்கலைப்பை குற்றமற்றதாக்குதல் தாய் மரண வீதத்தை நிச்சயம் குறைக்கும். தென் ஆபிரிக்க பொது மருத்துவமனைகளில் 1994 சட்ட மறுசீரமைப்பிற்கு முன்னர் ஆண்டுதோறும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு மூலம் 425 மரணங்கள் ஏற்பட்டன. கருக்கலைப்பை அங்கு சட்டபூர்வமாக்கியப் பின்னர் ஆண்டுக்கு 36 மரணங்கள் என குறைந்தது. 1975 இல் பிரான்ஸிலும் இத்தாலியிலும் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கிய பின்னர் மரண வீதம் 20 இல் இருந்து 10 வீதத்திற்கு குறைந்தது.
உடனடி பொது சுகாதாரம்
“பல நாடுகளில் கருக்கலைப்பும் உயர் தாய், சேய் மரண வீதமும் பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது” உலக சுகாதார சபை தீர்மானம் 20:41 ,+ 23 மே 1967 பாதுகாப்பற்ற கருக்கலைப்பு பெண்களுக்கு பாரியதொரு பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது. இது தொடர்பாக அரசுகள், தொண்டு நிறுவனங்கள் என்பன சட்டவிரோத கருக்கலைப்பை குறைக்க / கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகள், இனப்பெருக்க உரிமைகள் நீண்ட தொலைநோக்கு உடையவையாயினும் பேணப்பட வேண்டும்.
உலகளாவிய மனித உரிமைகள் தீர்மானம்(1948) அதி உச்சபட்ச சுகாதாரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று ஆகும். சுகாதாரம் என்பது இன, மத, அரசியல் நம்பிக்கை, பொருளாதார, சமூக நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு பேணப்பட வேண்டும்.
உலக சுகாதார ஸ்தாபனம் (Who) அரசியலமைப்பு 1948 உள, உடல் மற்றும் சமூக சிறப்பான நிலையே சுகாதாரம் ஆகும். இது நோயை தடுத்தல் என்பது மட்டும் ஆகாது.
மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா. சர்வதேச மாநாடு டெஹரான் (1968) இனப்பெருக்க உரிமை என்பது மனித உரிமைகளில் ஒரு பகுதியாகும். மனித உரிமைகள் என்ற வகையில் பாதுகாப்பான கருக்கலைப்பு உரிமை பின்வரும் தலைப்புகளில் கருதப்பட வேண்டும்.
வாழ்வதற்கான உரிமை, சுகாதாரத்திற்கான உரிமை, பாகுபாடற்ற சமத்துவத்திற்கான உரிமை, கொடூரமான, மனிதாபிமானமற்ற தரக்குறைவான பேணல் அற்ற தன்மைக்கான உரிமை, சுதந்திரம் தனிநபர் பாதுகாப்பு மற்றும் தனித்திருந்தல் என்பதற்கான உரிமை, தகவல் மற்றும் கல்விக்கான உரிமை.
பாதுகாப்பான கருக்கலைப்பு பற்றி புரிந்துணர்தலுக்கு எது அவசியமாகிறது, இது கருக்கலைப்பை தூண்டுவதாக அமையக்கூடாது, சிந்தாந்த கோட்பாடை மதிப்பதாக இருக்க வேண்டும், பெண் கருவுறும் கர்ப்ப காலத்தை வரையறுத்து தீர்மானித்தல், கருக்கலைப்புக்கான தேவையை வலியுறுத்தும் நிபந்தனைகள், கருக்கலைப்பை குறைப்பதற்கான சிறந்த ஆளுமையுடன் தலையீடு செய்தலை தூண்டுதல், பாதுகாப்பான கருக்கலைப்புக்கு திட்டமிடுதல் மற்றும் முகாமை செய்தல், அனுபவம் உள்ள திறமையானவர்களின் சேவை, சான்றுள்ள தராதரம் மற்றும் வழிகாட்டல்கள், கருக்கலைப்பின் வகைகள் யாரால் எங்கு மேற்கொள்ளப்படுகிறது என்ற தகவல், கருக்கலைப்பு முறைகள், சுகாதார சேவை நிபுணர்கள் மற்றும் வசதிகள் தொடர்பில் சான்று மற்றும் அனுமதி, தகுந்த நபரின் (வைத்தியரின்) அணுகுமுறை
இக்கட்டுரை எமது நாட்டில் கருக்கலைப்பு பற்றி எவ்வாறு உதவக்கூடும்?
பிறப்பு, கருக்கலைப்பு, இறப்பு என்பன மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து தொன்றுதொட்டு நிலவி வருகிறது. இலங்கையில் தாய் மரண வீதத்தில் மூன்றாம் இடத்தில் கருக்கலைப்பு காணப்படுகிறது. இலங்கையில் பிரித்தானியர் காலத்தில் 1885 இல் கருக்கலைப்பு குற்றமாக இருந்து வருகிறது. நூற்றுக்கு நூறு வீதம் பாதுகாப்பான மகப்பேறு என்று எந்தவொரு நாட்டிலும் இல்லை. தாய் மரணம் என்பது இடம்பெறவே செய்யும். ஆனால் குறைக்க முடியும். இங்கு தாய், சேய் நல மருத்துவர்கள் 320 பேர் உள்ளனர். உங்களின் திருமணமாகாத ஒரே 16 வயது மகள் கர்ப்பமுற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? பல பெற்றோர் இது தொடர்பான பிரச்சினையுடன் என்னை அணுகியுள்ளனர். திருமணம் ஆகாமல் கர்ப்பமான பெண்களை பராமரிக்கும் நிலையத்திற்கு உங்கள் மகளை அனுப்பி பிள்ளை பெற்றாலும் பிள்ளையை தத்துக்கொடுத்துவிட்டு வீடு திரும்பவும் என கூறலாமா அல்லது கருக்கலைப்பு சட்ட ரீதியான சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அனுப்பவும் என கூறலாமா? கருக்கலைப்பின் ஒரு வாரத்திற்கு பின்னர் அப்பெண் பாடசாலை செல்ல முடியும். மகளின் எதிர்காலமே இங்கு முக்கியம்.
இத்தனை வருடகாலமாக கருக்கலைப்பு பற்றிய எந்தவொரு கூக்குரலும் கூச்சலும் இடம் பெறவி ல்லை. கருக்க லை ப்பை அண்மையில் சட்டபூர்வமாக்க எத்தணித்தபோதே கூச்சல் போடுகின்றனர். கருக்கலைப்பால் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாத ஐக்கிய இராச்சியம் போன்று ஏன் இலங்கை மாறக்கூடாது? கருக்கலைப்பை சட்ட ரீதியாக மாற்றாவிட்டால் சட்டவிரோத கருக்கலைப்பு வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும். நானே வயது முதிர்ந்த மகப்பேற்று மருத்துவர் ஆகும். சட்டவிரோத கருக்கலைப்பில் இரத்தப்பெருக்கிற்கு உட்பட்டு பல பெண்கள் மரணிப்பதைப் பார்த்துள்ளேன். ஒருவர் சட்டபூர்வ கருக்கலைப்பிற்கு ஆதரவு வழங்கா
விட்டால் அவர் மறைமுகமாக சட்டவிரோத கருக்கலைப்பிற்கு ஆதரவு வழங்குகிறார் என்ற பேராசிரியர் எஸ் அருட்குமரனின் வசனத்துடன் இதனை நிறைவு செய்கிறேன்.
(பேராசிரியர் வில்பிரட் பெரேரா)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM