இலங்கையின் காப்புறுதித் துறையில் முன்னணி நிறுவனமான யூனியன் அஷ்யூரன்ஸ், புத்தாக்கம் மற்றும் நவீன தீர்வுகளை வழங்குவதில் தனக்கென தனிமுத்திரையை பதித்துள்ளது. வரையறைகளற்ற சேவைகளை வழங்குவது எனும் நிறுவனத்தின் கோட்பாட்டுக்கமைய. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் புதிய பிரத்தியேகமான முதலீட்டுத் திட்டங்களை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. குறிப்பாக சந்தையில் குறுங்கால முதலீட்டு வாய்ப்புகளுக்கான தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தனது கவனத்தை செலுத்தியிருந்தது.
யூனியன் சுப்பர் இன்வெஸ்ட்டர் என்பது சாமர்த்தியமான முதலீட்டாளர்களின் தெரிவாக அமைந்துள்ளதுடன், உயர் விளைவுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த காப்புறுதித்திட்டத்துக்கான தவணைக்கட்டணங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும். காப்புறுதி முதிர்வின் பின்னர், முதலீட்டாளருக்கு பெருமளவு விளைவுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எதிர்வரும் காலப்பகுதியில், அழுத்தமின்றி திருமணத்தை ஏற்பாடு செய்ய நினைப்பவர்கள் அல்லது தமது கனவு இல்லத்தை நிர்மாணித்துக் கொள்ள திட்டமிடுபவர்களுக்கு சிறந்த தீர்வாக அமைந்திருக்கும். தொழிலிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கான சிறந்த சேமிப்பாகவும் இது அமைந்திருக்கும். யூனியன் சுப்பர் இன்வெஸ்ட்டர் என்பது, எந்தவொரு முதலீட்டு தேவையையும் நிவர்த்தி செய்யும் வகையிலமைந்த பரிபூரண, சக்தி வாய்ந்த மற்றும் புத்தாக்கமான காப்புறுதி தீர்வாக அமைந்துள்ளது.
எவ்வாறாயினும் யூனியன் சுப்பர் இன்வெஸ்ட்டர் என்பது, உங்கள் கனவை நனவாக்கிக் கொள்வதற்கு உதவும் ஒரு திட்டமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தை திட்டவட்டமாக கணிக்க முடியாது. எதிர்பாராத விதமாக மரணம் சம்பவிக்கும் நிலையில் அல்லது அங்கவீனம் ஏற்படும் நிலையில், யூனியன் சுப்பர் இன்வெஸ்ட்டர் என்பது குடும்பத்துக்கு பக்கபலமாகவும் பாதுகாப்பாகவும் அமையக்கூடும். இதுபோன்ற எதிர்பாராத நிலைகளில், முதலீட்டுக் கணக்கில் பெற்றுக் கொள்ளப்பட்ட மொத்தத் தொகை அல்லது அடிப்படை முதலீட்டு தொகை இதில் எது அதிகமாக அமைந்துள்ளதோ, அனுகூலம் பெறுவோருக்கு வழங்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM