யாழ். விழிப்புலனற்றோர் சங்கத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர் கடிதமொன்றை எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நகேஸ்வரன் கௌசிகா (வயது 23) என்ற இளம் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குறித்த பெண் யாழ்.மருதடியிலுள்ள நண்பியின் வீட்டில் தங்கிவாழ்ந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் பிற்பகல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர் கடந்த வருடம் பேராதெனியா பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போதிலும் வீட்டு சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்லவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பெண் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை யாழ். பொலிஸார் கைப்பற்றியதுடன் அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில் அவர், பல்வேறு ஊழல்கள் தொடர்பான விடயங்களில் சட்டத்தரணி ஒருவர் தன்னை கட்டாயப்படுத்தி வந்ததாகவும் பெரும் தொகையான பணத்தை தாம் திருடிவிட்டதாகவும் தெரிவித்து, தம்மை அச்சுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே தான் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்ததாகவும் யுவதி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக குறித்த சங்க அங்கதவர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM