கண்டி திகனயில் திட்டமிட்டவகையிலேயே முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் தவறிவிட்டது என்று ஜெனிவாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை குறித்த உபகுழுக்கூட்டம் ஒன்றில் சர்வதேச முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஐரோப்பிய முஸ்லிம்களின் இலங்கைக்கான அமைப்பு இந்த விசேட உபகுழுக்கூட்டத்தை ஜெனிவா வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த உபகுழுக்கூட்டத்தில் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஐரோ ப்பிய முஸ்லிம் பிரதிநிதிகள், புலம்பெயர் முஸ்லிம்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய முஸ்லிம் பிரதிநிதிகள் குறிப்பிடுகையில்,
கண்டி திகன பகுதியில் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டவகையிலேயே தாக்குதல் கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் தவறிவிட்டது. அதனால்தான் வன்முறைகள் அதிகரித்தன. இதன் பின்னர் இவ் வாறு வன்முறைகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது.
குறிப்பாக சர்வதேச சமூகம் இதன் மூலம் அழுத்தத்தைப் பிரயோகிக்க முன்வரவேண்டும் என்றார்.
இதேவேளை உபகுழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் லுக்மான் ஹரீஸ் குறிப்பிடுகையில்,
முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் இனவாதக்கருத்துக்கள் பரப்பப்பட்டன. அது மட்டுமன்றி திகனயில் இடம்பெற்ற வன்முறைகளால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக இனவாதக் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
தனிப்பட்ட ரீதியான சம்பவங்களை எடுத்து இவ்வாறு இனவாத பரப்புரைகளை மேற்கொள்கின்றனர். கண்டி வன்முறை யானது வீதியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தினால் உருவாக்கப்பட்டது. அதாவது இரண்டு சமூகங்களுக்குமிடையில் முரண்பாடுகள் இருப்பதாக வெளிக்காட்டுவதற்கு இந்த வீதியில் இடம்பெற்ற சம்பவம் வெளிக்காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி முஸ்லிம்கள் போதைப்பொருட்களை இலங்கைக்குள் கொண்டுவருகின்றனர் என்ற கருத்துக்களையும் பரப்புகின்றனர்.
அப்போது முஸ்லிம் நபர் கைது செய்யப்பட்டார் என்றே செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் ஒரு பெரும்பான்மையினர் ஒருவர் கைது செய்யப்படும்போது அங்கு இன ரீதியான அடையாளம் வெளிப்படுத்தப்படுவதில்லை என்றார். இதே வேளை இந்த உபகுழுக்கூட்டத்தில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான காணொளிகளும் ஒளிபரப்பப்பட் டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM