முஸ்லிம்களுக்கு எதிராக திகனயில் இடம்பெற்ற சம்பவம் : ஜெனிவாவில் எதிரொலிப்பு

Published By: Priyatharshan

22 Mar, 2018 | 10:34 AM
image

கண்டி திக­னயில் திட்­ட­மிட்­ட­வ­கை­யி­லேயே முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதன்­போது சட்டம் ஒழுங்கை நிலை­நாட்ட அர­சாங்கம் தவ­றி­விட்­டது என்று  ஜெனி­வாவில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற    இலங்கை குறித்த உப­கு­ழுக்­கூட்டம் ஒன்றில்   சர்­வ­தேச முஸ்லிம் பிர­தி­நி­திகள் தெரி­வித்­தனர்.  

ஐரோப்­பிய  முஸ்­லிம்­களின் இலங்­கைக்­கான அமைப்பு  இந்த விசேட உப­கு­ழுக்­கூட்­டத்தை ஜெனிவா வளா­கத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. 

இந்த உப­கு­ழுக்­கூட்­டத்தில்    சர்­வ­தேச மனித உரிமை  செயற்­பாட்­டா­ளர்கள்,  ஐரோ ப்பிய முஸ்லிம் பிர­தி­நி­திகள்,  புலம்­பெயர்  முஸ்­லிம்கள்  என பல்வேறு தரப்­பி­னரும்    கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.  

இதில்  கருத்து வெளி­யிட்ட  ஐரோப்­பிய முஸ்லிம் பிர­தி­நி­திகள் குறிப்­பி­டு­கையில்,

கண்டி திகன பகு­தியில்  முஸ்­லிம்கள் மீது   திட்­ட­மிட்­ட­வ­கை­யி­லேயே  தாக்­கு­தல் கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  இந்த சந்­தர்ப்­பத்தில் சட்டம், ஒழுங்கை நிலை­நாட்ட  அர­சாங்கம் தவ­றி­விட்­டது. அத­னால்தான் வன்­மு­றைகள்   அதி­க­ரித்­தன.  இதன் பின்னர் இவ் ­வாறு  வன்­மு­றைகள் இடம்­பெ­று­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது.

குறிப்­பாக சர்­வ­தேச சமூகம் இதன் ­மூலம் அழுத்­தத்தைப் பிர­யோ­கிக்க முன்­வ­ர­வேண்டும் என்றார். 

இதே­வேளை  உப­கு­ழுக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்த  சர்­வ­தேச மனித உரிமை செயற்­பாட்­டாளர்   லுக்மான் ஹரீஸ் குறிப்­பி­டு­கையில், 

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இலங்­கையில் இன­வா­தக்­க­ருத்­துக்கள்  பரப்­பப்­பட்­டன.  அது­ மட்­டு­மன்றி    திக­னயில் இடம்­பெற்ற வன்­மு­றை­களால்  சிங்­கள மக்கள் மகிழ்ச்­சியில் இருப்­ப­தாக இன­வாதக் கருத்­துக்கள் பரப்­பப்­ப­டு­கின்­றன.   

தனிப்­பட்ட ரீதி­யான சம்­ப­வங்­களை எடுத்து இவ்­வாறு இன­வாத பரப்­பு­ரை­களை மேற்­கொள்­கின்­றனர்.   கண்டி  வன்­மு­றை ­யா­னது வீதியில் இடம்­பெற்ற ஒரு சம்­ப­வத்­தினால் உரு­வாக்­கப்­பட்­டது.   அதாவது  இரண்டு சமூ­கங்­க­ளுக்­கு­மி­டையில்    முரண்­பா­டுகள் இருப்­ப­தாக வெளிக்­காட்­டு­வ­தற்கு  இந்த வீதியில் இடம்­பெற்ற சம்­பவம் வெளிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.  அது­மட்­டு­மன்றி முஸ்­லிம்கள் போதைப்­பொருட்­களை இலங்­கைக்குள் கொண்­டு­வ­ரு­கின்­றனர் என்ற கருத்­துக்­க­ளையும் பரப்­பு­கின்­றனர்.

அப்­போது  முஸ்லிம்  நபர் கைது ­செய்­யப்­பட்டார் என்றே செய்திகள்  வெளியிடப்படுகின்றன.  ஆனால் ஒரு பெரும்பான்மையினர் ஒருவர் கைது செய்யப்படும்போது அங்கு   இன ரீதியான அடையாளம் வெளிப்படுத்தப்படுவதில்லை என்றார். இதே வேளை இந்த உபகுழுக்கூட்டத்தில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான  காணொளிகளும்  ஒளிபரப்பப்பட் டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49