இலங்கை, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த 12 அணிகள் பங்கேற்கும் மென்செஸ்டர் சர்வதேச சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டும் இப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பயிற்சியகத்தின் ஸ்தாபகத் தலைவர் அகஸ்டின் ஜோர்ஜ் தெரிவித்தார்.
அணிக்கு 9 பேரைக் கொண்ட 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான இப் போட்டித் தொடரில் மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன.
இதில் மாலைதீவிலிருந்து நான்கு அணிகளும் இந்தியாவின் காஷ்மீரிலிருந்து ஒரு அணியும் இலங்கையிலிருந்து 7 அணிகளும் கலந்துகொள்கின்றன.
இப் போட்டித் தொடரின் போது 20 முன்னாள் தேசிய வீரர்கள் பிரதம அதிதிகளாக அழைக்கப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளனர். அத்துடன் ஒவ்வொரு போட்டியிலும் ஆட்டநாயகனுக்கான விருதுகளை அவர்கள் கையளிப்பார்கள்.
12 அணிகளும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் இறுதிப் போட்டியுடன் மொத்தமாக 30 போட்டிகள் நடைபெறவுள்ளன. அத்தோடு முதல் சுற்றில் தோல்வி பெறும் அணிகளுக்கும் நம்பிக்கை கொடுத்து அடுத்த சுற்றுக்கு முன்ேனற்றுவதற்காக அவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பும் வழங்கப்படவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM