ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழுவினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ளார். அத்துடன் கட்சி மறுசீரமைப்பு குறித்து ஆராய்வதற்கு கட்சியின் செயற்குழுவும் நாளை கூடவுள்ளது.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் செயற்குழு நாளை வியாழக்கிழமை சிறிகொத்தாவில் கூடவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இதன்படி பிரதமரினால் நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழுவின் அறிக்கை நேற்று முன் தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதனை பெயரிட வேண்டும் என்பதுடன் பிரதி தலைவருக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்றும் கட்சியின் பதவிகளுக்கு செயற்திறன்மிக்கவர்களை அமர்த்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனவே கட்சியின் மறுசீரமைப்பு குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்கும் பதவி மாற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நாளை வியாழக்கிழமை கூடவுள்ளது.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழுவினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை வியாழக்கிழமை சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM