நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க வியூகம் அமைக்கும் ரணில்

Published By: Robert

20 Mar, 2018 | 09:55 AM
image

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை நாளை அல்­லது நாளை மறு­தினம்   கூட்டு எதி­ரணி சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக  கூறி­ வ­ரு­கின்ற நிலையில் அதனை எதிர்­கொண்டு  தோற்­க­டிக்­கப்­ப­தற்­கான வியூ­கங்­களை ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க   முன்­னெ­டுத்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இது தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பல்­வேறு தரப்­பி­ன­ரி­டமும் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றார்.  

நேற்­றைய தினம் அல­ரி­ மா­ளி­கையில் ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்­சியின்   பாரா­ளு­மன்­றக்­கு­ழுவை சந்­தித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க   நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்­பாக விரி­வாக கலந்­து­ரை­யா­டி­யி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அது­மட்­டு­மன்றி   ஏனைய கட்­சி­க­ளு­டனும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­ கட்­சியின்  உறுப்­பி­னர்கள்  இந் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையின் போது எவ்­வ­கை­யான தீர்­மா­னத்தை எடுக்­கப்­போ­கின்­றார்கள் என இது­வ­ரையில் உறு­தி­யாக அறி­விக்­கப்­ப­டாத நிலையில் அவர்­களின் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொள்ளும்  நோக்கில் காய்­களை நகர்த்தி வரு­கின்­றது. 

அது­மட்­டு­மன்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­திக்­க­வுள்ள பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்கள்  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க ஆத­ரவு வழங்­கு­மாறு   கோர­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  மேலும்  தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பும்  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க ஆத­ரவு வழங்கும் என ஐக்­கிய தேசி­யக்­கட்சி நம்­பு­கின்­றது. 

எவ்­வா­றெ­­னினும் தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் எம்.பி.க்களு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்சி எதிர்­பார்க்­கின்­றது. பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை  சமர்ப்­பிக்­கப் ­போ­வ­தாக கூட்டு எதி­ரணி   தெரி­வித்து வரு­கின்ற நிலையில் தேசிய அர­சி­யலில் மீண்டும் பர­ப­ரப்­பான நிலை  ஏற்பட்டுள்ளது. 

கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  வெற்றியீட்டியதை அடுத்தே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44