அடுத்­த­வா­ர­ம­ளவில் எனது புதல்வர் நாமல் ராஜ­பக்ஷ கைது செய்­யப்­ப­டலாம்

Published By: Raam

15 Feb, 2016 | 07:39 AM
image

எனது குடும்­பத்தை தண்­டிக்­கவும் எனது ஆத­ர­வா­ளர்­களை பழி­வாங்­க­வுமே நிதிக்­குற்றப் புல­னாய்வு பிரிவை அல­ரி­மா­ளி­கையில் இருந்து இயக்கி வரு­கின்­றனர். புல­னாய்வு பிரி­விற்­கான பொலிஸ் மா அதி­ப­ராக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க செயற்­பட்டு வரு­கிறார். நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வு விசா­ர­ணைப்­பட்­டி­யலில் எனது குடும்ப உறு­பி­னர்­களே முன்­ன­ணியில் உள்­ளனர். பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­து­விட்டு அடுத்த ஒரு கிழ­மையில் குறித்த நபரை கைது­செய்யும் நிலைமை காணப்­ப­டு­கி­றது. அடுத்த வார­ம­ளவில் எனது புதல்வர் நாமல் ராஜபக் ஷவைக்­கூட கைது­செய்ய வாய்ப்­புகள் உள்­ளன

என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

யானையின் வாலில் தொங்­கிக்­கொண்டு சொர்க்கம் செல்ல ஸ்ரீலங்கா சுத்­திரக் கட்சி முயற்­சிக்­கின்­றது. ஆனால் யானையின் வாலில் தொங்கி பய­ணிப்­ப­தற்கு மக்கள் அங்­கீ­காரம் கொடுக்­க­வில்லை. யானையின் வாலில் தொங்­கிக்­கொண்டு தலைவர் போகின்றார். அவர் கையை விட்டால் அவரை பின்­தொ­டரும் அனை­வரும் அந்­த­ரத்தில் தொங்­க­வேண்­டிய நிலை ஏற்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உள்­ளூ­ராட்சி சபை உறுப்­பி­னர்கள் மற்றும் மஹிந்த அணி­யினர் நேற்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுடன் நீர்­கொழும் கொச்­சிக்­கடை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள ரன்வெல் ஹோட்டல் சந்­திப்­பொன்றை நடத்­தி­யி­ருந்­தனர். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்கள் 95 வீத­மா­னோரும், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­ணியின் மஹிந்த ஆத­ரவு அணி­யி­னரும் இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்­டனர். அதேபோல் இந்த சந்­திப்பின் போது எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் தாம் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வது தொடர்­பிலும் புதிய பய­ணத்தில் உள்­ளூ­ராட்சி மன்ற பிர­தி­நி­தி­களின் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வது தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

இந்த சந்­திப்­பின்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கருத்து தெரி­விக்­கையில்,

யானையின் வாலை பிடித்­துக்­கொண்டு சொர்க்கம் செல்ல தலைவர் முயற்­சிக்­கின்றார். தலை­வரை பின்­தொ­டர்ந்து தொண்­டர்­களும் சொர்க்கம் செல்ல முயற்­சிக்­கின்­றனர். ஆனால் தலைவர் யானையின் வாலை விட்டால் அதன் விளைவு அவரை பின்­தொ­டரும் தொண்­டர்­களும் கீழே விழ­வேண்டும். இந்த நிலைமை தான் இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் ஏற்­பட்­டுள்­ளது. யானையில் தொற்­றிக்­கொண்டு தமது அர­சியல் பய­ணத்தை முன்­னெ­டுத்து செல்ல ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி முயற்­சிக்­கின்­றது. இந்த பயணம் நல்­ல­தொரு பய­ண­மாக அமை­யாது. கட்­சியின் தலை­வரை நம்பி கள­மி­றங்­கிய உறுப்­பி­னர்­க­ளையும் இறு­தியில் அழுத்­தத்­திற்கு உட்­ப­டுத்தும் வகையில் தான் இந்த செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளது.

அதேபோல் இன்று நல்­லாட்சி அர­சாங்கம் பற்றி கதைக்­கின்­றனர். ஆனால் இந்த நல்­லாட்சி அர­சாங்கம் தனது பய­ணத்தை அல­ரி­மா­ளி­கையில் இருந்தே ஆரம்­பித்­துள்­ளது. எமது ஆட்­சியில் நடத்த மோச­டி­களை கண்­ட­றி­வ­தா­கவும் அதற்­காக நிதிக்­குற்றப் புல­னாய்வு பிரிவை ஆரம்­பித்­தது அதன் மூல­மாக விசா­ரித்து வரு­கின்­றனர். இந்த நிதிக் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு என்­பது இலங்­கையில் அர­சியல் அமைப்­பிற்கும் நீதி முறை­மைக்கும் முர­ணா­னது. இந்த நடை­மு­றை­யா­னது உலகில் எந்த ஒரு நாட்­டிலும் கையா­ளப்­ப­டாத முறை­மை­யாகும். அதேபோல் சர்­வ­தேச சட்­ட­திட்­டத்­துக்கு முற்­றிலும் முர­ணா­னது.

எனது குடும்­பத்தை தண்­டிக்­கவும் எனது ஆத­ர­வா­ளர்­களை பழி­வாங்­க­வுமே நிதிக்­குற்றப் புல­னாய்வு பிரிவை அல­ரி­மா­ளி­கையில் இருந்து இயக்கி வரு­கின்­றனர். புல­னாய்வு பிரி­விற்­கான பொலிஸ் மா அதிபர் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக செயற்­பாட்­டடு வரு­கிறார். வரு­கின்றார். இந்த பட்­டி­யலில் எனது குடும்ப உறு­பி­னர்­களே முன்­ன­ணியில் உள்­ளனர். இப்­போது பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­து­விட்டு அடுத்த ஒரு கிழ­மையில் குறித்த நபரை கைது­செய்யும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அடுத்த வாரம் எனது புதல்வர் நாமல் ராஜபக் ஷவைக்­கூட கைது­செய்ய வாய்ப்­புகள் உள்­ளன.

அதேபோல் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இந்த நாட்டின் அபி­வி­ருத்தி எங்கு சென்­றுள்­ளது என்ற கேள்வி எழுந்­துள்­ளது. நான் இந்த நாட்டை புதிய ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் ஒப்­ப­டைத்த போது நாட்டின் அபி­வி­ருத்­தியும் மக்­களின் வாழ்­வா­தார நிலை­மையும் உய­ரிய மட்­டத்தில் இருந்­தது. ஆனால் இன்று நல்­லாட்சி என்ற அர­சாங்கம் ஒரு ஆண்­டு­காலம் ஆட்­சியை நடத்­தி­யுள்­ளது. இந்த ஒரு ஆண்­டு­கா­லத்தில் நாட்டின் அபி­வி­ருத்­திக்­காக வாங்­கிய சர்­வ­தேச கடன் பணம் எங்கே? நன்­கொ­டைகள் எங்கே? இன்று கிரா­மங்­க­ளுக்கு சென்றால் அங்கு ஒரு பாலத்தை கூட புன­ர­மைக்­க­வில்லை. ஒரு கட்­டிடம் பூர­ன­மாக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான ஒரு மோச­மான ஆட்­சியே இன்று நாட்டில் நில­வு­கின்­றது.

அதேபோல் நான் கட்­சியின் தலை­மைப்­ப­த­வியை கொடுத்­து­விட்டு ஒதுங்கிக் கொண்­ட­தாக கூறு­கின்­றனர். ஆனால் அது எந்த வகை­யிலும் உண்மை அல்ல. நிறை­வேற்று அதி­கா­ரத்தின் மூல­மா­கவே எனது பத­வி­யையும் பறித்­தெ­டுத்­தனர். அதேபோல் இன்று என்னை ஆத­ரித்­து­வரும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்­களை பழி­வாங்­கவும் கட்­சியில் இருந்து நீக்­கவும், ஒழுக்­காற்று நட­வைக்கை எடுக்­கவும் முயற்­சித்து வரு­கின்­றனர். ஆகவே அவர்­களை காப்­பாற்­றவும் அவர்­க­ளுக்கு அடைக்­கலம் கொடுக்­கவும் இப்­போது ஒரு அணி தேவைப்படுகின்றது. அவ்வாறான நிலையில் இன்று இந்த கூட்டத்தில் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் 95வீதமானோர் என்னை நம்பி இங்கு வருகை தந்துள்ளனர். அவர்களை காப்பாற்ற வேண்டும். அதேபோல் தனித்த பயணத்தை மேற்கொள்ள என்னை அழைக்கின்றீர்கள். இந்த அழைப்பை நினைத்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். ஆனால் இன்று நாம் அவசரப்பட்டு எந்த காரியத்தையும் முன்னெடுக்க முடியாது. இப்போது நாம் எதிர்க்கட்சியாக செயற்படவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதை மனதில் வைத்துக்கொண்டு நாம் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02