கொழும்பில் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இரண்டு பிரதான முஸ்லிம் பாடசாலைகளான ஹமீத் அல்– ஹுசெய்னி கல்லூரி அணிக்கும் ஸாஹிரா கல்லூரி அணிக்கும் இடையிலான ஜனாதிபதி கிண்ண அழைப்பு பாடசாலைகள் கால்பந்தாட்டத்தில் இறுதிப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஹமீத் அல்– ஹுசெய்னி கல்லூரியின் 80களின் பழைய மாணவர்கள் குழுவின் ஏற்பாட்டில் இப்போட்டி 11ஆவது தடவையாக நடத்தப்படுவதுடன் சகல இனங்களையும் மதங்களையும் சேர்ந்த 20 பாடசாலைகள் பங்குபற்றின.
இச்சுற்றுப் போட்டியில் லும்பிணி, கேட்வே, புனித ஆசீர்வாதப்பர் ஆகிய அணிகளை வெற்றிகொண்டு ஹமீத் அல்– ஹுசெய்னி இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
மறுபுறத்தில் இஸிபத்தன, மாரிஸ் ஸ்டெல்லா, டி மெஸிநொட் ஆகிய அணிகளை ஸாஹிரா வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இறுதிப் போட்டிக்கு தெரிவான இந்த இரண்டு அணிகளிலும் 19 வயதுக்குட்பட்ட கனிஷ்ட தேசிய வீரர்கள் மற்றும் முதல்தர கழகமட்ட வீரர்கள் இடம் பெறுவதால் இப்போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போட்டிக்கு முன்பதாக மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியும் கந்தானை டி மெஸிநொட் கல்லூரியும் விளையாடவுள்ளன.
சம்பியனாகும் அணிக்கு ஜனாதிபதி கிண்ணத்துடன் தங்கப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு கிண்ணங்களுடன் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுடன் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
அத்துடன், விசேட விருதுகளாக அதி சிறந்த கோல் காப்பாளருக்கான தங்கக் கையுறை, அதிக கோல்களைப் போட்ட வீரருக்கான தங்கப் பாதணி, இறுதிப் போட்டி நாயகன், சுற்றுப் போட்டியின் பெறுமதிவாய்ந்த வீரர் ஆகிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.
அணிகள் விபரம்
ஹமீத் அல்– ஹுசெய்னி: எம்.எவ்.எம். அமான் (அணித் தலைவர்), எம்.ஏ.ஜே.எம். ரிஷான், எம்.எஸ். சப்றின், எஸ்.கே. அபிஷயன், எம்.ஆர்.எம். சஹான், எம்.என். அப்துல் பாசித், அஜித் பிரசாந்த், ரீ.எஸ்.ரீ. நதீர், எஸ்.இஸட்.எம். ஸுல்பார், எம்.எஸ்.எம். குர்ஷித், எம்.எவ்.எம். ஆஷிம், எம்.ஆர்.எம். ரிமாஸ், எம்.என்.எம். ஆதில், அஸ்பர் அஹமத், எம்.என்.எம். நுஸ்கான், அப்துல் அஸீஸ், எம். அஸீம், எம். சப்வான், எம்.என்.எம்.சப்ரான், இஸட்.ஏ.எம். ஆஷிக்.
ஸாஹிரா: எம்.எவ்.எம். ஆக்கிப் (அணித் தலைவர்), எம். முர்ஷித், எம்.இஸட்.ஏ. ஹிமாஷ், எம். ஹம்மாத், எம்.ஷஹீன், எம்.எம்.எம். முஷ்பிர், எச்.ஆர். ராஸா, எம். ஷக்கிர், எம். அக்தார், எம்.எம்.எம். சாஜித், எம். ரஷீத், எஸ். அஹமத், எம்.என்.எம். நசூர்தீன், எம்.எம்.எம். பிர்னாஸ், ரீ.எவ். ஜிப்றி, எவ்.கே.என்.எஸ். அஹமத், எவ்.எம். தலாஹ், எச்.ஆர். ரீஸா, எம்.ஆர்.எம். மஷூத், எம்.ஆர்.எம். ரிப்காதுல்லா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM