(தமிழகத்திலிருந்து ஆர்.ராம்)
முஸ்லிம்களை மையமாக வைத்து அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை கண்டிக்கும் வகையிலும் அதற்கு நீதிகோரியும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினரும் தி.வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டத்தில் இலங்கை உணர்வாளர்கள் அனைவரையும் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டம் சம்பந்தமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ''கேசரி''க்கு தெரிவிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக ஏற்கனவே எமது உறவுகள் சிதைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அவர்களுக்காக நீதிகோரி போராட்டங்களையும் அழுத்தங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.
இவ்வாறான தருணத்தில் தற்போது இலங்கையில் மற்றொரு சிறுபான்மை மக்களான முஸ்லிம்களை மையமாக வைத்து பல்வேறு சம்பவங்கள் அந் நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்றுள்ளன. அடக்குமுறைக்கு உட்படுத்துகின்ற எந்தவொரு சம்பவங்களும் கண்டிக்கத்தக்கவையேயாகும்.
அதனடிப்படையில் உடனடியாக இத்தகைய நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களை சம உரிமையுடன் நடத்தி அவர்களுக்கான வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டுமென்பதை அழுத்தம் திருத்தமாக இடித்துரைக்கும் வகையில் நாம் மாபெரும் கண்டன முற்றுகைப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.
இதில் அனைத்து உணர்வாளர்களும் பங்கெடுத்து எமது கண்டனத்தையும் செய்தியையும் இலங்கை அரசாங்கத்துக்கு ெதளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM