நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் கைச்சாத்து

Published By: Priyatharshan

17 Mar, 2018 | 09:21 AM
image

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தினேஷ் குண­வர்­தன, வாசு­தேவ நாண­யக்­கார, ஷமல் ராஜ­பக் ஷ, விமல் வீர­வன்ச, உதய கம்மன்­பில,டலஸ் அழகப் பெரும,மஹிந்த யாப்பா அபே­வர்­தன, சாலிந்த திஸா­நா­யக்க,ரஞ்ஜித் சொய்ஸா,மஹிந்­தா­னந்த அழுத்­க­மகே, ஜானக வக்­கும்­புர, தாரக பால­சூ­ரிய, இந்­திக்க அனு­ருத்த, பந்­துல குண­வர்­தன, நிரோஷன் பிரே­ம­ரத்ன, டி.வீ. ஷானக, நாமல் ராஜ­பக் ஷ, பிர­சன்ன ரண­துங்க, சிசிர ஜய­கொடி, பியல் நிஷாந்த உட்­பட இரு­பது பேர் குறித்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் நேற்று கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.

இதே­வேளை ஏனைய உறுப்­பி­னர்­களின் கையொப்­பங்­களை   பெறு­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.  மேலும் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கையொப்பம் பெறு­வ­தற்­கான ஏற்­பா­டு­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.அத்­துடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரும் குறித்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை குறித்து கூட்டு எதிர்க்­கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தா­கவும் கூட்டு எதிர்க்­கட்சி தெரி­வித்­துள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் 14 கார­ணிகள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. எனவே அதனை அடிப்­ப­டை­யாகக்­கொண்டு ரணில் விக்­ர­ம­சிங்க பிர­த­ம­ராக பதவி வகிப்­ப­திலும், அமைச்சுப் பொறுப்­பு­களை ஏற்று நட­வ­டிக்கை எடுப்­ப­திலும், அவரை பிர­த­ம­ராகக் கொண்­டுள்ள அர­சாங்­கத்­திலும் தமக்கு நம்­பகம் இல்லை என அதில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. குறித்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­ அடுத்­த­வாரம் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­டலாம் எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை பிர­த­ம­ருக்கு எதி­ரான  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கடந்த வாரம் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிப்­ப­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­க­னவே தீர்­மா­னித்­தி­ருந்­தது. எனினும் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை மற்றும் ஏனைய கட்சிகளில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக அது கடந்த வாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50