பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கைச்சாத்திட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, ஷமல் ராஜபக் ஷ, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில,டலஸ் அழகப் பெரும,மஹிந்த யாப்பா அபேவர்தன, சாலிந்த திஸாநாயக்க,ரஞ்ஜித் சொய்ஸா,மஹிந்தானந்த அழுத்கமகே, ஜானக வக்கும்புர, தாரக பாலசூரிய, இந்திக்க அனுருத்த, பந்துல குணவர்தன, நிரோஷன் பிரேமரத்ன, டி.வீ. ஷானக, நாமல் ராஜபக் ஷ, பிரசன்ன ரணதுங்க, சிசிர ஜயகொடி, பியல் நிஷாந்த உட்பட இருபது பேர் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நேற்று கைச்சாத்திட்டுள்ளனர்.
இதேவேளை ஏனைய உறுப்பினர்களின் கையொப்பங்களை பெறுவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெறுவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கூட்டு எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 14 காரணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அதனை அடிப்படையாகக்கொண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதிலும், அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று நடவடிக்கை எடுப்பதிலும், அவரை பிரதமராகக் கொண்டுள்ள அரசாங்கத்திலும் தமக்கு நம்பகம் இல்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கடந்த வாரம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சி ஏற்கனவே தீர்மானித்திருந்தது. எனினும் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை மற்றும் ஏனைய கட்சிகளில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக அது கடந்த வாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM