உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் பெயர்கள் வர்த்­த­மா­னியில் வெளியீடு

Published By: Priyatharshan

17 Mar, 2018 | 09:12 AM
image

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­களின் 10 மாவட்­டங்­க­ளுக்­கான  பெயர் பட்­டியல் நேற்று வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்­டது. எஞ்­சிய  15 மாவட்­டங்­களை சேர்ந்த உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் பெயர்கள் இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இதன்­படி இன்னும் ஒரு சில தினங்­களில்15 மாவட்­டங்­களின் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் பெயர் பட்­டியல் வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­படும்.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் புதிய தேர்தல் முறை­மையின் பிர­காரம் பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி நடைப்­பெற்­றது. இந்த புதிய முறை­மையின் பிர­காரம் 60 வீதம் தொகு­தி­வா­ரி­யா­கவும் 40 வீதம் விகி­தா­சாரம் மூல­மா­கவும் உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டனர். 

அத்­துடன் இந்தத் தேர்­தலில் 25 சத­வீத பெண் பிர­தி­நி­தித்­து­வமும் அமு­லுக்கு வந்­தது. இதன்­கா­ர­ண­மாக உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 8325 ஆக அதி­க­ரித்­தது.   அனைத்து உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­மை­யினால் உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களில்  போதிய இட­வ­ச­தி­களும் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றது. 

குறிப்­பாக கொழும்பு மாந­கர சபை உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அதி­க­மாக இருப்­ப­தனால் ஆரம்ப கூட்­டத்­தொ­டரை பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச ஞாப­கார்த்த மண்­ட­பத்தில் நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் பெண் பிர­தி­நி­தித்­து­வங்­களை  உறு­தி­ப­டுத்­து­வ­திலும் பெரும் நெருக்­க­டி­யான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அந்த நிலை­யி­லேயே பத்து மாவட்­டங்­களின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான உறுப்­பி­னர்­களின் பெயர் பட்­டியல் நேற்று வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்­டது. 

இதன்­பி­ர­காரம் அம்­பாந்­தோட்டை, மாத்­தறை, கிளி­நொச்சி,புத்­தளம்,மொன­ரா­கலை, அநு­ரா­த­புரம், களுத்­துறை,இரத்­தி­ன­புரி, மாத்­தளை மற்றும் பொலன்­ன­றுவை ஆகிய மாவட்­டங்­களின் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் பெயர் பட்­டி­யலே நேற்று வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்­டது. 

எனினும் கொழும்பு, கண்டி, காலி, நுவரெலியா, யாழ்ப்பாணம், கம்பஹா,பதுளை,அம்பாறை,மட்டகளப்பு,திருகோணமலை,முல்லைதீவு,மன்னார்,குருநாகல் ஆகிய மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பெயர் பட்டியல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59