ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள தூதுக்குழுவினருடன் கலகொட அத்தே ஞானசார தேரர் இணைந்துள்ளதாக இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயத்திற்கு முன்னதாகவே கலகொட அத்தே ஞானசார தேரர் தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ளார்.
ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்தினால் ஜப்பான் வாழ் இலங்கையர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச் சந்திப்பில் ஜப்பானிலுள்ள பௌத்த விகாரைகளின் தலைமைத் தேரர்களுடன் ஞானசார தேரரும் சமுகமளித்திருந்தார்.
அந்நிகழ்வில் பெற்றுக் கொள்ளப்பட்ட சில புகைப்படங்களைக் கொண்டு , ஜனாதிபதியுடன் சென்றுள்ள தூதுக்குழுவில் கலகொட அத்தே ஞானசார தேரரும் இடம்பெற்றுள்ளார் என வெளியாகியுள்ள செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லையென அவ் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM