பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறும் முக்கியமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளது.
இலங்கை – இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதிவரும் சுதந்திரக் கிண்ண முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இத் தொடரில் இறுதியாக நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தி இறுதிக்கு முதல் அணியாக முன்னேறிய இந்தியாவுடன் மோதப்போகும் மற்றைய அணி எது என்பதைத் தீர்மானிக்கும் தீர்க்கமான போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.
3 நாடுகள் பங்கேற்கும் சுதந்திரக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் கொழும்பில் கடந்த 6ஆம் திகதி தொடங்கியது.
இப்போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறைமோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்திய அணிக்கு ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்துவிட்டன. 4 போட்டிகளில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு அவ்வணி முன்னேறியது.
இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் மோதுவது இலங்கையா பங்களாதேஷா என்பது இன்றைய போட்டியில் தெரியவரும். இதில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளுமே 1 வெற்றி, 2 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளன.
இலங்கை அணி ஏற்கனவே பங்களாதேஷிடம் 214 ஓட்டங்களைக் குவித்தும் தோற்றது.
இதனால் அதற்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் இலங்கை அணி இருக்கிறது.
பங்களாதேஷ் அணி ஏற்கனவே இலங்கையை வீழ்த்தியிருந்ததால் மீண்டும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
இந்நிலையில் காயத்தால் முத்தரப்பு தொடரில் பங்கேற்காமல் இருந்த பங்களாதேஷ் அணித் தலைவர், இலங்கைக்கெதிரான கடைசி ஆட்டத்தில் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் கடந்த மாதம் நடைபெற்ற பங்களாதேஷ், இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றபோது ஷகிப் அல் –ஹசனுக்கு காயமேற்பட்டது.
இதனால் இலங்கைக்ெகதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஷகிப் அல்–ஹசன் பங்கேற்றவில்லை. இடது கை விரலில் ஏற்பட்ட காயத்திற்காக வெளிநாடு சென்று சிகிச்சை மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்றைய நடைபெறவுள்ள போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் பங்களாதேஷ் அணி ஷகிப் அல் – ஹசனை அணிக்கு அழைத்துள்ளது.
அதேவேளை இலங்கை அணித் தலைவர் சந்திமால் மெதுவாக பந்துவீசிய குற்றத்திற்காக இரு போட்டிகளில் விளையாடத் தடை பெற்றுள்ளார். அதனால் இன்றைய போட்டிக்கும் திஸரவே தலைமையேற்றுள்ளார்.
இந்நிலையில் அரையிறுதிப் போட்டியாக நடைபெறும் இன்றைய போட்டியில் வெற்றிபெற்று இறுதிக்குள் நுழையப் போவது இலங்கையா, பங்களாதேஷா என்பதை பொறுத் திருந்து பார்ப் போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM