புனித றஜப் மாதத்திற்கான தலைப்பிறைப் பற்றி தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசலில் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பொதுச் செயலாளர் எம்.தெளபிக் சுபைர் தெரிவித்தார்.
மெளலவி ஜே.அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கொழும்பு பெரிய பள்ளி வாசலின் நிருவாகிகள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், மேமன், ஹனபி பள்ளிவாசல்களின் நிருவாகிகள் ஆகியோர் கலந்துகொள்வர்.
இம்மாநாட்டில் தலைப்பிறை பற்றி எடுக்கப்படும் தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஊடாகவும் ஏனைய ஊடகங்கள் மூலமாகவும் நாட்டு மக்களுக்கு மாநாட்டின் தலைவரினால் அறிவிக்கப்படும்.
தலைப்பிறை சம்பந்தமாக ஊர்ஜிதமற்ற தகவல்களையோ வதந்திகளையோ மக்களுக்கு பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பெரிய பள்ளிவாசலின் பொதுச் செயலாளர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM