கல்லெறிவோரைக் களையெடுக்குமாறு வேண்டுகோள்!!!

Published By: Digital Desk 7

15 Mar, 2018 | 02:03 PM
image

அறிவற்ற விதத்தில் பயணிகளுக்கு பீதியையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஏறாவூரில் கல்லெறிவோரை கண்டு பிடித்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துமாறு ரயில்  நிலைய அதிகாரிகள் ஏறாவூர் பொலிஸாரையும், பொது அமைப்புக்களையும் பொதுமக்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக ஏறாவூர் ரயில் பாதையை ஒட்டியுள்ள பள்ளிவாசல்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறும்  அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

சமீப சில நாட்களாக கொழும்பு - மட்டக்களப்பு, மட்டக்களப்பு – கொழும்புக்கிடையிலான நகர் சேர் சாதாரண மற்றும் கடுகதி ரயில்கள்  ஏறாவூரைக் கடக்கும்போது சில கும்பல்கள் ஆங்காங்கே நின்று ரயில் கண்ணாடிகளை நோக்கி கல், மண் என்பனவற்றை வீசுவது பற்றி பொலிஸாருக்கும் ரயில் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகளும், ரயில்வே பணியாளர்களும் கருத்துத் தெரிவிக்கும்போது,

"ரயில் பயணம் என்பது அநேகமானோருக்கு மன மகிழ்ச்சியையும், சௌகரியத்தையும் தரக் கூடியது என்பதால் பெரும்பாலானோர் ரயில் பயணத்தைத் தெரிவு செய்கிறார்கள்.

குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணித் தாய்மார், வயோதிபர்கள், நோயாளிகள் இப்படிப்பட்டோர் மிகுந்த பாதுகாப்பு சௌகரிய நம்பிக்கையுடன் ரயில் பயணத்தை மேற்கெசாள்ளும் போது சில விஷமிகள் தமது அறிவீனத்தால் ரயில் கண்ணாடிகளை நோக்கி கல், மண் என்பனவற்றை வீசி  பீதியையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்துகின்றனர்.

ரயில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கண்கள் உட்பட பயணிகளின் ஏனைய அவயவங்களைக் காயப்படுத்தக் கூடும், சிலவேளை இத்தகைய காயங்கள் நிரந்தர அங்கவீனமாகவும் மாறிவிடக் கூடும்.

நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் சிக்கலான கொந்தளிப்பான நிலைமையில் இத்தகைய விசமத்தனமான செயற்பாடுகள் இருக்கும் நிலைமைகளை  இன்னும் சிக்கலாக்கி விடக் கூடும்.

ஆகவே, இதுபற்றி ஒட்டு மொத்த சமூகமும் அக்கறை எடுக்க வேண்டும். இத்தகைய நாசகாரச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில் ஏறாவூர் பொலிஸாரும், ஏறாவூரிலுள்ள சமூக நல அமைப்புக்களும், பள்ளிவாசல் மற்றும் பொது நிறுவனங்களும் கவனம் எடுக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55