திருமணம் செய்வது போன்று தாத்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம் பேத்தி கூறும் காரணம்!!!

Published By: Sindu

14 Mar, 2018 | 05:23 PM
image

சீனாவில் உடல்நிலை சரியில்லாத தனது தாத்தா எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்பதால் அவருடன் திருமண கோலத்தில் பேத்தி எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

25 வயதான  Fu Xuewei என்ற இளம் பெண் 87 வயதான தனது தாத்தாவான Fu Qiquanயுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் Fu Xuewei தனது தாத்தாவை திருமணம் செய்வது போன்ற புகைப்படம்  எடுத்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து Fu Xuewei  கூறுகையில்,

"தாத்தாவுக்கு கடந்த இரண்டாண்டுகளில் இரு முறை பக்கவாதம் ஏற்பட்டதோடு, கடுமையான இதய நோயும் உள்ளது. அவர் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

எனக்கு வருங்காலத்தில் திருமணமானவுடன் பிறக்கும் பிள்ளைகளுக்கு என் தாத்தாவின்  முகம் தெரியவேண்டும்.

இதோடு அவர் என் திருமணத்தை பார்த்த மாதிரியும் இருக்கும் அதற்காக இந்த போட்டோ ஷூட் நடத்தினேன்" என கூறியுள்ளார்.

இளம் வயதிலேயே தனது பெற்றோர் விவாகரத்து வாங்கிவிட்ட நிலையில் தாத்தா தான் தன்னை வளர்த்து ஆளாக்கினார் எனவும் Fu Xuewei  உருக்கத்தோடு கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right