நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அரசாங்கத்தால் முடக்கப்பட்டிருந்த வட்ஸ்அப் சேவை இன்று நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பும் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக நிலவிய அசாதாரண நிலைமையை அடுத்து, சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் போன்றனவுக்குத் தடை விதிக்கப்பட்டு முடக்கப்பட்டன.
மேலும், இவற்றில் வைபர் சேவை நேற்று நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையில் அனைவராலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பேஸ்புக் பார்வையிட முடியும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பேஸ்புக் அதிகாரிகள், அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நாளை தினம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக நாளை மறுநாள் இலங்கை முழுவதும் பேஸ்புக் மீதான தடை நீக்கப்படும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM