இந்தியாவின் மகாராஷ்டரா மாநிலத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த குடிநீரை குடித்து 14 பேர் பலியாகி உள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டரா மாநிலத்தில் உள்ள யவத்மால் கிராம மக்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக அங்குள்ள ஆழ்துளை போர்வெல் குழாயில் வரும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த குழாயில் வரும் தண்ணீரில் நச்சுத்தன்மை உள்ளதால் இதை குடித்த மக்கள் 14 பேர் பலியாகியுள்ளதோடு மேலும் 38 பேர் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றனர்.
மேலும் 110க்கும் மேற்பட்டோர் சிறுநீரக கோளாரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் தெரிவித்ததாவது,
"அந்த கிராம மக்கள் குடித்த தண்ணீரில் நச்சுத்தன்மை வாய்ந்த நைட்ரேட் கலந்துள்ளதால் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பல முறை கிராம மக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தும் . கிராம மக்களின் கோரிக்கைக்கு அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என அப் பகுதி மக்களும் சிகிச்சையளிக்கும் வைத்தியர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM