இலங்கையின் தற்போதைய நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் இயலுமை இருப்பதாகவே சீனா நம்புகின்றது. அதேபோன்று இலங்கையானது இங்குள்ள சீன பிரஜைகளை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகின்றோம் என இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சுயான் தெரிவித்திருக்கின்றார்.
நேற்று முன்தினம் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே சீனத் தூதுவர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த சந்திப்பின் போது சீனத் தூதுவர் மேலும் குறிப்பிடுகையில்:
இலங்கையும் சீனாவும் பாரம்பரிய நட்பு நாடுகள். நீண்டகாலமாக இரண்டு நாடுகளும் ஒன்றுக்கொன்று உதவி கொண்டிருக்கின்றன. இலங்கையின் அனைத்து துறைகளிலும் இணைந்து பணியாற்றுவதற்கு சீனா விரும்புகின்றது. குறிப்பாக இரண்டு நாடுகளினதும் தலைவர்கள் அடைந்த இணக்கப்பாட்டுக்கு அமைவாக செயற்படுவதற்கு இரண்டு நாடுகளும் எதிர்பார்க்கின்றன.
அத்துடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் மெகா வேலைத்திட்டங்களும் விரைவுபடுத்துவதற்கும் அதன் மூலம் இரண்டு நாடுகளினதும் மக்களுக்கு நன்மையை பெற்றுக் கொடுப்பதற்கும் சீனா எதிர்பார்க்கின்றது. இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் சீனா அவதானித்து கொண்டிருக்கின்றது. இந்த நிலைமையை அரசாங்கத்தினாலும் அதன் மக்களினாலும் தீர்த்து கொள்ள முடியும் என சீனா நம்புகின்றது என்றார்.
இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிடுகையில்,
சீனாவின் நீண்டகால உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். இலங்கையில் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கும் இலங்கையின் தேசிய ஒற்றுமை மற்றும் ஸ்திரத் தன்மையை பாதுகாப்பதற்கு சீனா வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கின் றோம். ஒரு சீனா என்ற சீனாவின் கொள்கையை நாங்கள் மதிக்கின்றோம்.
அத்துடன் சீனா இலங்கையில் முன்னெடுக் கும் திட்டங்களை மதிப்பிடவும் அனுமதி பெற் றுக்கொடுக்கவும் வெளிவிவகார அமைச்சு சம்பந்தப் பட்ட திணைக்களங்களுடன் ஒருங்கிணைந்து பணி யாற்றும். குறிப்பாக இலங்கை மக்கள் உணரக் கூடிய நன்மைகளைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின் றோம் என்றார்.
இதேவேளை இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரிய விளக்கம் ஒன்றை வெளிவிவகார அமைச்சர் இதன்போது அளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM