அமெரிக்கா - தென் கரோலினா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் கடவுளுக்காக தனது கண்களை குருடாக்கி தியாகம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் கரோலினா மாகாணத்தை சேர்ந்த 20 வயதான Kaylee Muthart என்ற இளம்பெண் போதை மருந்து பழக்கத்தால் அவஸ்தை அனுபவித்து வந்துள்ளார்.
இந் நிலையில் மத நம்பிக்கை மிகுந்த Muthart கடந்த பெப்ரவரி மாதம் ஒரு தேவாலயத்தின் வெளியே தமது கண்களை சேதப்படுத்துவதை அந்த வழியாக சென்ற பலர் கண்டுள்ளனர்.
அதில் சிலர் இவரது நடவடிக்கையை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர். ஆனாலும் Muthart தமது கண்களை குருடாக்கியுள்ளார்.
இந் நிலையில் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த பொலிஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
கல்லறைகளில் கட்டுண்டு கிடக்கும் ஆத்மாக்களுக்காக அவர்களை விடுவிக்க தாம் தனது கண்களை கடவுளுக்கு தியாகம் செய்துள்ளதாகவும், கல்லறைகளில் ஆத்மாக்கள் கட்டுண்டு கிடப்பதால் தான் உலகம் இருண்டு காணப்படுவதாகவும் அதனாலையே அழிவுகள் பெருகியுள்ளதாகவும் Muthart தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையிலிருந்து சிகிச்சைக்கு பின்னர் குடியிருப்பு திரும்பிய Muthart மகிழ்ச்சியாக உணர்வதாகவும், போதை மருந்து பழக்கத்தில் அடிமையாக இருந்த காலத்தில் இருந்ததைவிடவும் வாழ்க்கை தற்போது மிகவும் அழகாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமது மகளுக்கு ஒரு வழிகாட்டும் நாயை வாங்குவதற்காக நிதி திரட்டும் பணியில் Muthartஇன் தாயார் ஈடுபட்டு வருகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM