(எம்.எப்.எம்.பஸீர்)
ஆனமடுவ நகரில் அமைந்துள்ள மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடாத்தியதாக கூறப்கடும் சந்தேக நபர்கள் 7 பேரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் நடாத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பில் இன்று அதிகாலை வேளை சந்தேக நபர்களைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெற்றோல் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான, குறித்த ஹோட்டலுக்கு அருகில் உள்ள மற்றொரு வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. காணொளிகளை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சந்தேக நபர்களைக் கைது செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரும் 19 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டோர் எனவும், அவர்களுக்கு எதிராக அவசர கால சட்ட விதிவிதானங்களுக்கு அமைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM