மஹிந்த தலைமையிலான குழுவுக்கு சிவப்பு எச்சரிக்கை.!

Published By: Robert

11 Mar, 2018 | 08:48 AM
image

மைத்­திரி – மஹிந்த தரப்­புகள் இணை­யுமா? நிரந்­த­ர­மாகப் பிரி­யுமா? என்­பது தொடர்­பாக எதிர்­வரும் 3 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள கூட்­டத்­தி­லேயே தெரி­ய­வரும் எனக் கட்சி வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.  உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் உட்­பட சில முக்­கிய விட­யங்கள் குறித்து ஆராய்­வ­தற்­காக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது கூட்டம் எதிர்­வரும் 3 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது. . இந்தக் கூட்­டத்தில் கலந்து கொள்­ளும்­படி அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீல.சு.கட்சி அமைச்­சர்­க­ளுக்குப் பாரா­ளு­மன்ற 

உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீல.சு. கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் கடந்த 24 ஆம் திகதி அழைப்புக் கடி­தங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன என ஸ்ரீல.சு.க பொதுச்­செ­ய­லாளர் அமைச்சர் துமிந்த திசா­நா­யக்க தெரி­வித்தார்.  

இதே­வேளை, இக்­கூட்­டத்தில் கலந்­து­கொள்­ளாத ஸ்ரீல.சு.கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­னவும் அவர் தெரி­வித்தார்.  

இதே­வேளை,ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி, பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் ‘தாமரை மொட்டு’ சின்­னத்தில் இந்த உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களில் போட்­டி­யிடத் தீர்­மா­னித்­துள்­ளது. இந்த நிலையில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இக் கூட்­டத்தில் கலந்­து­கொள்ள மாட்­டார்கள் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  

இது இவ்­வா­றி­ருக்க ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து கொண்டு மற்­று­மொரு கட்­சியின் வெற்­றிக்­காக செயற்­பட முடி­யாது. எதிர் வரும் அனைத்து தேர்­தல்­க­ளிலும் கட்­சியின் வெற்­றி­காக அனைத்து உறுப்­பி­னர்­களும் செயற்­பட வேண்டும். அவ்­வாறு இல்லை என்றால் கட்­சியை விட்டு நீக்கும் வகை­யி­லான சிவப்பு எச்­ச­ரிக்­கையை கூட்டு எதிர்க் கட்­சியில் செயற்­படும் மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட குழு­வி­ன­ருக்கு அனுப்­பு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என ஸ்ரீல.சு.கட்சி வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.   

அனைத்து உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கு­மான தேர்­தலை ஜன­வரி மாதத்தில் நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. நாளை மறுநாள் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் தொடர்­பான வர்த்­த­மானி அறி­விப்பு வெளி­யி­டப்­பட உள்ள நிலையில் , அனைத்து அர­சியல் கட்­சி­களும் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்கு தயா­ரா­கி­வ­ரு­கின்­றன.  

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலை எதிர்­கொள்­வது குறித்து பல்­வேறு மட்­டங்­களில் தயார்ப்­ப­டுத்­தல்­களில் ஈடுப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கூட்டு எதிர்க் கட்­சியில் அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் தொடர்பில் தீர்க்­க­மான தீர்­மா­னங்­களை எடுப்­பது குறித்து ஆராய்­வ­தற்கு மேற்­படி சுதந்­திர கட்­சியின் மத்­திய செயற்­குழு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கூட உள்­ளது.  

மேலும் கூட்டு எதிர்க்­கட்­சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் அனை­வரும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் கட்­சியின் வெற்­றிக்­காக செயற்­பட வேண்டும். இது குறித்து எடுக்­கப்­படும் மத்­திய செயற்­கு­ழுவின் தீர்­மா­னத்தை மீறும் பட்­சத்தில் பதவி, தரா­தரம் பாராது கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்­கான தீர்­மா­னங்கள் கட்­சியின் உயர் மட்­டத்தில் எடுக்­கப்­பட்­டுள்­ள­ன­என்றும் குறித்த கட்­சியின் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார் .  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்பினராக இருந்து கொண்டு மற்றுமொரு கட்சியின் வெற்றிக்காக செயற்படுவதை அனுமதிக்க முடியாது என்பதே தற்போதைய நிலைப்பாடாக உள்ளது. இதனடிப்படையில் இவ்வாரம் நடைபெறும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார் .   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45