சுதந்திரக் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய ஆணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற 3 ஆவது இருபதுக்கு - 20 போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸும் குணதிலக்கவும் நல்ல ஆரம்பத்தினை கொடுத்தனர்.
குசல் மெண்டிஸ் 57 ஓட்டங்களையும் குணதிலக்க 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியைக் காட்டி வெற்றிக்கு வித்திட்ட குசல் ஜனித் பெரேரா இம் முறையும் தனது அதிரடியால் இலங்கை அணி ஸ்தீரமான ஓட்ட எண்ணிக்கையைபெற வழிவகுத்தார்.
குசல் பெரேரா 78 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் அதிரடியாக விளையாடிய உபுல் தரங்க 15 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைப்பெற்றது.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் மஹமதுல்லா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள பங்களாதேஷ் அணி 215 ஓட்டங்களைப் பெறவேண்டும்.
போட்டி முடிவடையும் வரை பொறுத்திருந்து பார்ப்போம் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் நிலைத்திருக்குமா பங்களாதேஷ் என்று அல்லது இப் போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைபெறுமா இலங்கை என்று.....
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM