உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் ஒரு வார காலத்துக்குள் நாடளாவிய யுத்த நிறுத்தமொன்றை நடைமுறைப்படுத்த உலக அதிகார சக்திகள் வெள்ளிக்கிழமை இணக்கம் கண்டுள்ளன.
ஜேர்மனிய முனிச் நகரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளையடுத்தே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
என்னும் இந்த யுத்த நிறுத்தமானது சிரியாவிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அல் – நுஸ்ரா குழுவினர் ஆகியோருக்கு எதிரான போருக்கு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
போரால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் சிக்கியுள்ள மக்களுக்கான விநியோகங்களை மேற்கொள்வதற்காக முன் னெடுக்கப்பட்ட மேற்படி யுத்த நிறுத்தம் குறித்து சர்வதேச ரீதியில் ஆதரவைப் பெற்ற சிரிய குழுவிலுள்ள அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அலெப்போ மாகாணத்தில் ரஷ்ய படையினரின் ஆதரவுடன் சிரிய இராணுவம் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களானது அலெப்போ பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அச்சுறுத்தலாகவுள்ளன.
இந்நிலையில் தற்போது எட்டப்பட்டுள்ள யுத்த நிறுத்த இணக்கப்பாடு இலட்சிய நோக்காக உள்ள அதேசமயம், அதன் வெற்றி அந்த இணக்கப்பாட்டை எட்டிய தரப்பினர் தமது வாக்குறுதிகளுக்கு கௌரவமளிக்கிறார்களா என்பதில் தங்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்தார்.
''தற்போது வெறும் வார்த்தைகளே உடன்படிக்கையில் உள்ளன. எதிர்வரும் நாட்களில் அதனை நடமுறைப்படுத்த வேண்டிய தேவையுள்ளது" என அவர் கூறி னார்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலைமையிலான செயற்குழுவொன்று சிரியாவில் மோதல்களில் ஈடுபட்டுள்ள பிரிவினருடனான கலந்துரையாடல் மூலம் யுத்த நிறுத்த அமுலாக்கத்தை நடைமுறைப்படுத்தும் செயற்கிரமத்தில் ஈடுபடவுள்ளது.
இந்நிலையில் மோதல்கள் இடம்பெறும் இடங்களில் சிக்கியுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளை விநியோகிக்கும் நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, இந்த உடன்படிக்கை குறித்து ரஷ்ய வெளிநாட்டு அமைச்சர் செர்கேயி லாவ்ரோவ் மற்றும் சிரியாவுக்கான ஐக்கிய நாடுகள் விசேட தூதுவர் ஸ்ரப்பன் டி மிஸ்துரா ஆகியோருடன் இணைந்து அறி விப்புச் செய்தார். இந்த உடன்படிக்கைக்கு 17 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM