வவுனியா வைத்தியசாலையில் நேற்றையதினம் குழந்தை திருட்டுப்போனதாக தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குழந்தை அனுராதபுரத்தில் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் 5ஆம் இலக்க விடுதியில் கடந்த 7ஆம் திகதி இரவு பிறந்த ஆண் குழந்தை ஒன்றினை வைத்தியசாலை விடுதியில் தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவரிடம் கொடுத்துவிட்டு குளியலறைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை வாங்கிய நபரையும் தனது குழந்தையையும் காணவில்லை என்று வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் தாயார் ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையின் தாயார் பொகஸ்வெவே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என்பதுடன் திருடப்பட்ட குழந்தை அவரின் 4ஆவது ஆண் குழந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் குழந்தையை பெற்ற தாயாரே தனது குழந்தையை விற்று விட்டு திருட்டு போய்விட்டதாக நாடகமாடியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் குறித்த குழந்தையின் தாயாரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அனுராதபுரத்தில் மீட்கப்பட்ட குழந்தையுடன் குழந்தையை வாங்கியவர் என சந்தேகிக்கபடும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இருவரையும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM