பிறந்து 2 நாட்களேயான குழந்தையை விற்று விட்டு காணவில்லை என நாடகமாடிய தாய் கைது!!!

Published By: Digital Desk 7

10 Mar, 2018 | 03:27 PM
image

வவுனியா வைத்தியசாலையில்  நேற்றையதினம் குழந்தை திருட்டுப்போனதாக தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குழந்தை அனுராதபுரத்தில் இன்று  பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் 5ஆம் இலக்க விடுதியில் கடந்த 7ஆம் திகதி இரவு பிறந்த ஆண் குழந்தை ஒன்றினை வைத்தியசாலை விடுதியில் தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவரிடம் கொடுத்துவிட்டு  குளியலறைக்கு  சென்று திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை வாங்கிய நபரையும் தனது குழந்தையையும் காணவில்லை என்று வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் தாயார் ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தாயார் பொகஸ்வெவே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என்பதுடன் திருடப்பட்ட குழந்தை அவரின் 4ஆவது ஆண் குழந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் குழந்தையை பெற்ற தாயாரே தனது குழந்தையை விற்று விட்டு திருட்டு போய்விட்டதாக நாடகமாடியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் குறித்த குழந்தையின் தாயாரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அனுராதபுரத்தில் மீட்கப்பட்ட குழந்தையுடன் குழந்தையை வாங்கியவர் என சந்தேகிக்கபடும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இருவரையும் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13