ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை குறித்த முதலாவது விவாதம் நடைபெறவுள்ள நிலையில் அதில் இலங்கையின் சார்பில் ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி பங்கேற்று உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் இலங்கை குறித்த இரண்டாவது விவாதத்தில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தொடரில் இலங்கையின் சார்பில் பங்கேற்கவுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்புக்கு உட்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் அமுலாக்கத்தை அடிப்படையாகக்கொண்டே இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே இலங்கை குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு அமர்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. அதன்போது இலங்கை குறித்த பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. அந்த அறிக்கையில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளினால் 100 க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் அவை திருத்தங்ளுடன் நிறைவேற்றப்பட்டிருந்தன.
இலங்கை அரசாங்கம் சர்வதேச பங்களிப்புடன் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டுமென தெரிவித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியிருந்தது.
அந்தப் பிரேரணையானது கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இலங்கைக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது வரை குறித்த பிரேரணை முழுமையாக அமுல்படுத்தப்படாமை தொடர்பில் சர்வதேச நாடுகள் இம்முறை கூட்டத்தில் கேள்வியெழுப்பவுள்ளன. ஏற்கனவே 37 ஆவது கூட்டத் தொடரின் முதலாவது அமர்வில் உரையாற்றிய பிரித்தானிய மற்றும் கனடா ஆகிய நாடுகள் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன.
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் காணப்படுகின்ற தாமதம் காரணமாக அதிருப்தியடைந்துள்ளதாக கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தெரிவித்திருந்தன.
இலங்கை அரசாங்கம் பொதுநலவாய மற்றும் சர்வதேச விசாரணையாளர்கள் நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறையை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்பை வெ ளிக்காட்ட வேண்டும் என்று கனடா வலியுறுத்தியிருந்த நிலையில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்துவதில் முன்னேற்றத்தை வெ ளிக்காட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக பிரித்தானியா அறிவித்திருந்தது.
அந்தவகையில் இம்முறை கூட்டத் தொடரில் இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் 14 உபகுழுக்கூட்டங்கள் ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெறவுள்ளன. இந்த கூட்டங்களில் இலங்கை பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டோரின் பிரதிநிதிகள் சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
எதிர்வரும் 12ஆம் திகதி பாரதி கலாசார அமைப்பினால் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஒரு உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. மனித உரிமை
பேரவை வளாகத்தின் 23 ஆம் இலக்க அறையில் இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அதேபோன்று 13 ஆம் திகதி தமிழ் உலகம் என்ற அமைப்பினால் இலங்கை தொடர்பில் ஒரு உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. 7 ஆம் இலக்க அறையில் நடத்தப்படவுள்ள இந்த உபகுழுக்கூட்டத்தில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
மேலும் 14 ஆம்திகதி புத்துருவாக்க சமூக திட்ட முன்னணி என்ற அமைப்பினால் மற்றுமொரு இலங்கை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டம் 21ஆம் இலக்க அறையில் நடத்தப்படவுள்ளது. 15 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் ஒரு சர்வதேச மனித உரிமை அமைப்பினால் இலங்கை விவகாரம் தொடர்பில் விசேட உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
குறிப்பாக இலங்கையில் தன்னிச்சையாக தடுத்துவைத்தல் விவகாரம் தொடர்பிலேயே இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு இலங்கை விவகாரம் தொடர்பில் உரையாற்றவுள்ளனர். 21 ஆம் இலக்க அறையில் இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் பசுமைத் தாயகம் அமைப்பினால் ஒரு உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. அந்தக்கூட்டமும் 21ஆம் இலக்க அறையிலேயே நடத்தப்படவுள்ளது.
மேலும் மற்றுமொரு சர்வதேச அமைப்பினால் எதிர்வரும் 19 ஆம்திகதி ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் 24ஆம் இலக்க அறையில் ஒரு உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தக்கூட்டமானது இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. வின் மீளாய்வு என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.
இது இவ்வாறிருக்க பசுமை தாயகம் அமைப்பினால் மற்றுமொரு இலங்கை தொடர்பான உபகுழுக்கூட்டம் 20 ஆம்திகதி 25 ஆம் இலக்க அறையில் நடைபெறவுள்ளது. இலங்கையின் நிலைமாறுகால நீதி தொடர்பாக இந்த உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. அதே தினத்தன்று சர்வதேச பௌத்த நிவாரண அமைப்பினால் இலங்கை தொடர்பான ஒரு விசேட உபகுழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.
27ஆம் இலக்க அறையில் இந்த உப குழுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது. அந்த
வகையில் இந்த அனைத்து உபகுழுக்கூட் டங்களிலும் இலங்கை தொடர்பான விடயங்கள் ஆராயப்படவுள்ளன. விசேட
மாக இலங்கை மனித உரிமை நிலை
மைகள் மற்றும் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல் வேறு விடயங்கள் தொடர்பில் இந்த உபகுழுக்கூட்டங்களில் ஆராயப்பட வுள்ளன.
அதன்படி ஜெனிவா செல்லவுள்ள இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழு வினர் ஜெனிவா அமர்வுகளில் உரையாற்ற வுள்ளதுடன் உபகுழுக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM