இந்தியா - திருச்சியில் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் போடாமல் பயணம் செய்த தம்பதியினரை பொலிஸ் அதிகாரி ஒருவர் எட்டி உதைத்ததால் தடுமாறி கீழே விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் கர்ப்பிணிபெண்ணான தனது மனைவியை ஏற்றிக்கொண்டு சென்ற போது ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸார் குறித்த இருவரும் தலைக்கவசம் அணியாது சென்றதால் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறுறு கைகை காட்டியுள்ளனர்.
பொலிஸாரின் சைகையை கவனிக்காது சென்ற இருவரையும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மோட்டார் கைக்கிளில் துரத்திச் சென்று எட்டி உதைத்துள்ளார்.
பொலிஸார் எட்டி உதைத்ததில் கட்டுப்பாட்டை இழந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.
கீழே விழுந்த கர்ப்பிணிப் பெண் மீது அவ் வீதி வழியே வந்த வேன் ஒன்று ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் திரண்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM