பெண்கள் மற்றும் சமூகத்தினர் பாதுகாப்பாகவும், வினைத்திறனுடன் வாழத்தகுந்த பொருளாதார மற்றும் சமூக நிலைகளை உருவாக்க வேண்டும் என நல்லாட்சி அரசாங்கம் மீளவும் வலியுறுத்துகின்றது. பெண்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தமது மூலோபாய பங்களிப்பினை வழங்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது,
அனைவருக்கும் சம உரிமையுடைய சமூக உருவாக்கத்தின் ஊடாக அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான அங்கீகாரம் வழங்கல் மற்றும் அவர்களுக்கான அதிகாரங்களை பகிர்ந்தளித்தல் என்பவற்றை சாத்தியப்படுத்த வேண்டும். அவ்வாறானதொரு சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலம் பெண்கள் சமூகத்தில் ஒரு வலுவான பங்களிப்பினை வழங்க முன்வருவர்.
பொதுவாகவே பெண்கள் வீடுகளில் மாத்திரமின்றி வேலைத்தளங்களிலும், சமூகத்திலும் பொறுப்புணர்வு டன் செயற்பட்டு தமது பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். அனைத்து துறைகளிலும் சிறப்பான அடைவினை பெறுவதற்கு பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். இன்றளவில் கல்வி, முகாமைத்துவம், கலை என எல்லாத்துறைகளிலும் பெண்கள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். அரசியல் களத்திலும் பெண்களின் சிறப்பான பங்களிப்பினை பெற்றுக்கொள்ளும் விதமாகவே கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 25 சதவீதமான பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டது.
எனவே அரசாங்கமானது பெண்கள் பாதுகாப்பாகவும், வினைத்திறனுடனும் வாழ்வதற்கான சமூக நிலைகள் உருவாக் கப்பட வேண்டும் என்பதனை கருத்திற் கொள்வதோடு, அனைத்து பெண்களுக்கும் மகளிர்தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM