சீமெந்து விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையினை விரைந்து ரத்து செய்யுமாறு தேசிய நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
சீமெந்து விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில்,
இலங்கையில் சீமெந்து தயாரிப்பு நிறுவனங்களாக இரு பிரதான நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. அதே சந்தர்ப்பத்தில் மேலதிகமாக 24 சீமெந்து நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. வருடத்திற்கு சிறப்பான வருமானங்களை ஈட்டுபவையாகவும் இச் சீமெந்து நிறுவனங்கள் காணப்படுகின்றன.
2003 ஆம் ஆண்டு நுகர்வோர் தொடர்பான சட்டத்தின் அடிப்படையில் நோக்கும் போது சீமெந்து விலை அதிகரிப்பதற்கான நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான ஆணையகத்தில் தனது அனுமதியை கோர வேண்டும். ஆனால் கடந்த வாரத்தில் ஒல்சிம் சீமெந்தின் விலை 30 ரூபாவால் அதிகரித்த விலையில் விற்கப்பட்டு வருகின்றது. சிலரின் அரசியல் நோக்கத்துக்காகவே இவ்விலை உயர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒல்சிம் சீமெந்து பக்கற் ஒன்றின் விலை 930 ரூபாவாக காணப்படுகின்றது. 30 ரூபாய் விலை அதிகரிப்பினால் ஒல்சிம் சீமெந்து 960 ரூபாய் அதிக விலையில் விற்கப்படுகின்றது. இது நுகர்வோரின் உரிமைகளை மீறும் வகையில் உள்ளன. இதனால் நுகர்வோர் சீமெந்து கொள்வனவு செய்வதில் பாரிய சிக்கலினை மேற்கொண்டு வருகின்றனர். சீமெந்து விலை அதிகரிப்பு தொடர்பில் விரைந்து தீர்மானத்தை அரசாங்கம் எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள் ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM