அமெரிக்கா - வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகைக்கு வெளியில் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று வெள்ளை மாளிகைக்கு அருகே வந்த நபர் ஒருவர் தான் தற்கொலை செய்வதற்கு முன்பாக அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகவும் அதன்பின் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் வெள்ளை மாளிகை பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
மேலும் இச் சம்பவத்தின் போது ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் புளோரிடாவில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயரை வெளியிட பொலிசார் மறுத்து விட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, இது குறித்து வாஷிங்டன் பொலிஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM